இன்று Sep 5; (ஹிந்து ஞான மரபின் வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..
ஆனால்... அது மட்டுமே அல்ல!
கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும், உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி"
அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!
என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!
தூத்துக்குடி தந்த தூயோன்
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு தெரியுமா?
Only very few ppl. know; Why?
Thatz the sad story of tamil media world:(
இன்று, பார்க்கப் போவது, ஒரு தமிழ்ப் "பஞ்சாயத்து":)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
vs தமிழ்ப் பண்டிதர் திரு. அனந்தராம ஐய்யர்
"ஐய்யர்" -ன்னு எழுதிட்டதாலேயே, Twitter பெரிய மனுஷாள், என்னை நோக்கிப் படையெடுக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்:)
ஏற்கனவே 10 மாதங்கள் ஒதுங்கி இருந்து, இப்ப தான் மீண்டு வந்துள்ளேன்...
Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
= இன்றைய Twitter மட்டுமல்ல!
= அன்றே... வ.உ.சி யும் பட்டிருக்காரு, இலக்கணத் தமிழ் வாத்திகளின் கையில்!
கருத்து வேற, மனிதம் வேற!
* நான் சொல்வது = கருத்து மட்டுமே!
* தனி மனிதத் தாக்குதல் = ஒரு போதும் நான் அறியாதவன்!
"KRS-ஐ ஒழிச்சிக் கட்டுங்கோ; பூச்சி மருந்து அடிச்சி ஒழிங்க"
- போன்ற "இட்லிவடை வாசகங்கள்" என் வாயில் வரவே வராது:(
பூச்சி மருந்து அடிச்சி, "என் சாவு"
= Twitter பெரிய மனிதர்களான ஒங்க கையில் இல்லை!:(
அது இன்னொருவன் கையில்!!
எனவே, இதில் உள்ள "தர்ம-நியாயங்களைத்" திருமுருகன் தாளில் வைத்து விடுகிறேன்;
உண்மை, உறுத்து வந்து ஊட்டும்!
அதுவும் தரவோடு வந்தா? = தாங்க முடியாது தான்:)))
* சொல்வது என்ன-ன்னா: தமிழுக்கு நேர்ந்த கொடுமைகள்!
* என் ஏக்கம் = தமிழ் ஏக்கம்: அது.. ஐய்யர் என்றல்ல! யார் செய்தாலும் வரும்.. கலைஞர் உட்பட!
தமிழை = "டுமீல்" என்று எள்ளி விட்டு,
அதே தமிழில் இலக்கணப் பாடம் எடுக்கும் Twitter "வாத்திகள்" யாராயினும் = எனக்கு இதே ஏக்கம் தான்!
இவர்களுக்கு, தமிழ் = "உணர்வுப் பூர்வமானது" அல்ல! வெறும் Rulebook; ஆடு-களம், அவ்வளவே!
உதட்டில் மட்டுமே தமிழ்; உள்ளத்தின் ஆழத்தில் = ??? எள்ளலே!:(
இவங்களை விட்டுருவோம்; மற்றபடி...
தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்"
= யாராயினும்.. பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!
தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
உ.வே. சாமிநாத ஐயர் என்றொரு தமிழ்த் தாத்தா; அவர் திருவடிகள் என்றும் எனக்குத் துணை!
Enough of this digression (or) Introduction.. Let's go & see வ.உ.சி-யின் தமிழ்ப் பஞ்சாயத்து:)
எட்டுக்கால் பூச்சிக்கு = எத்தினி கால்?
மாற்றிக் கேக்குறேன்; "Spider Man"-க்கு எத்தனை கால்?:)
அதே போல்... 18 கீழ்க்கணக்கு = மொத்தம் எத்தனை நூல்கள்?:)
திருக்குறளே மிக்க பரவல் (பிரபலம்)
ஆனால் 18 கீழ்க் கணக்கில் = 18 நூல்கள்!
ஆனா, ஒரே ஒரு நூலில் மட்டும் = "பஞ்சாயத்து"
அந்த 18ஆம் நூல் எதுய்யா? = இன்னிலையா? கைந்நிலையா?
வ.உ.சி vs. அனந்த ராம ஐய்யர்
தமிழில், "தனிப்பாடல்கள்" -ன்னு ஒரு வகை இருக்கு!
அந்த வெண்பா யாரு எழுதுனது-ங்கிற வெவரமெல்லாம் இருக்காது; திடீர்-ன்னு தோன்றி உலாத்தும்!
வெறும் சுவையே அன்றி, அவை நம்பத் தகுந்த ஆதாரம் அல்ல!
எட்டுத் தொகை நூல்கள் என்னென்ன? ஒரு "வெண்பா" இருக்கு
* "நற்றிணை நல்ல குறுந்தொகை" -ன்னு தொடங்கும்;
* அந்த நூல்கள் பலருக்கும் தெரியும்; தனிப்பாடல் is just a memory tip;
அதே போல், 18 கீழ்க் கணக்கு நூலுக்கும் ஒரு தனிப்பாடல்!
= ஆனா, அதுல தான் பிரச்சனையே!:) வெண்பாவைப் பாருங்க..
நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை, முப்
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலையகாஞ்சியோடு,ஏலாதி என்பவே,
கைந்நிலையவாம்கீழ்க் கணக்கு
எவன் எழுதித் தொலைச்ச வெண்பாவோ? கணக்கு இடிக்குது:) List போடுங்க பார்ப்போம்!
இன்னிலைய -ன்னும் இருக்கு;
கைந்நிலைய -ன்னும் இருக்கு;
ஆனா, கூட்டினா = 18 வரணுமே! 17 + 2 = 18 ???
எந்தப் பொலவன்-யா Basic Mathematics தெரியாம, "வெண்பா" பாடி, உயிரை வாங்குறான்?:)
சங்கம் மருவிய காலம்; அந்த 18ஆம் நூல் எது? = இன்னிலையா? கைந்நிலையா??
அதாம்பா இது -ன்னு வாழைப்பழத் தீர்ப்பு சொல்ல முடியாது:) ரெண்டும் வெவ்வேறு நூல்கள்!
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்வது = இன்னிலை;
* இ.வை. அனந்தராம ஐய்யர் சொல்வது = கைந்நிலை;
ஈழத் தமிழர் சி.வை. தாமோதரம் பிள்ளை = கேள்விப்பட்டு இருக்கீயளா?
* உ.வே.சா இலக்கியம் திரட்டினாரு-ன்னா,
* சி.வை.தா இலக்கணம் திரட்டினாரு;
தொல்காப்பியம் முழுசும் திரட்டினாரு;
இன்றுள்ள பல இலக்கண நூல்கள், உரை நூல்கள் (சேனாவரையர்/ நச்சினார்க்கினியர்), கலித்தொகை, சூளாமணி -ன்னு...
சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பித்தவர் = சி.வை.தா
இவரும் தமிழ்த் தாத்தா தான்!
ஆனா பொது மக்களுக்குத் தெரியாது; ஏன்-னா பரப்புரை இல்லை:(
அதற்காக உ.வே.சா-வை நான் குறைத்து மதிப்பிடுவதாக கும்மி அடிக்க வேண்டாம்:)
என்றும் அவர் = நம் தமிழ்த் தாத்தா!
சொல்ல வரும் கருத்து: ஒன்றை மட்டுமே பரக்கப் பேசினால் வரும் நிலை:(
Oops.. என்ன சொல்ல வந்தேன்-ன்னா.. உ.வே.சா / சி.வை.தா அளவுக்கு இல்லீன்னாலும்...
நம்ம வ.உ.சி யும் ஓலை திரட்டி இருக்காரு; தெரியுமா??
* ஆனா, வெளியே போய், அதிகம் திரட்ட முடியலை = சிறை வாசம்;
* செக்கிழுத்து வெளி வந்த பின்போ = நோய் வாசம்!
18 கீழ்க் கணக்கு: வ.உ.சி காட்டிய ஓலைச் சுவடிகள் = இன்னிலை!
ஆனால்.... ஆனால்....
இ. வை. அனந்தராம ஐய்யர் = ஒரு தமிழ்ப் பேராசியர்!
நட்பு வட்டச் செல்வாக்கு மிக்கவர்;
இவரும், சில சுவடிகள் வச்சிருக்காரு; மொத்தம் 45 பாட்டு; அதிலே கூட 18 பாட்டு = பாதி தான் தெரிவன!
ஆங்காங்கு சொற்களே இல்லை; சம்ஸ்கிருதச் சொற்களும் அதிகம் என்பதும் மறைக்காது சொல்லியாகணும்!
இவரைச், சேது சமஸ்தான வித்வான், உ.வே. இராகவ ஐயங்கார் அவர்களும் பலமாக வழிமொழிகிறார்;
அம்புட்டு தான்...........
எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
= Power of "Networking", even in Tamizh:(
உ.வே. இராகவ ஐயங்கார் = பெரும் அறிஞர் என்பதையும் மறைக்காது சொல்லி ஆகணும்! கம்பனில் குளித்தவர்;
"வடமொழிக் காளிதாசனை"த் தமிழுக்குள் கொண்டு வந்தவர் = "அபிஞான சாகுந்தலம்";
* ஒரு புறம் = சிறை விட்டு வெளியே வந்து.. நொடிந்து போன வ.உ.சி
* மறு புறம் = சமஸ்தான வித்வான்கள் & தமிழ்ப் பண்டிதர் குழாம்
ஐய்யய்யோ, இப்படிப் பத்திக்கிச்சே; உம்ம்ம்... யாரு சொல்வது சரி?
வேண்டாம், தனி மனிதப் போக்கை விட்டுருவோம்...
* "யாரு?"-ன்னு கேள்வி வேணாம்!
* "எது?" -ங்கிற கேள்வி கேட்போம்! => எது 18 கீழ்க் கணக்கு??
இரண்டு பக்கமும், ஒரேயொரு தெளிவு மட்டுமில்லை!
தனிப்பட்ட சுவடி எல்லாஞ் சரி தான்; ஆனா..
18 கீழ்க் கணக்கிலே, அந்தச் சுவடி சேர்த்தி என்பதற்கான ஆதாரம்? = யாருக்குமே கிடைக்கலை;
வ.உ.சி மட்டும் அரும்பாடுபட்டு, gave an "indirect" proof
= தொல்காப்பிய நூற்பா 113;
= அதற்கு, ஓலைச் சுவடியின் 5ஆம் செய்யுளை, மேற்கோள் காட்டியுள்ளார் பண்டைய உரையாசிரியர்;
யாப்பருங்கல விருத்தி உரையிலும், இன்னிலை 2ஆம் செய்யுள், மேற்கோள் காட்டப்பட்டு இருக்கு;
ஆனால், தரவு இருந்தும்... அன்றைய செல்வாக்கு???
** பதிப்பகம்/ தமிழ் வித்வான்கள் = வ.உ.சி யை ஒப்புக் கொள்ளாது, அனந்த ராம ஐய்யர் பக்கமே "அணி" திரண்டனர்!
** இ. வை. ஐய்யர் தரவே தரலீன்னாலும்... வடசொற்கள் மிகுந்த ஏடு = கைந்நிலை: 18 கீழ்க் கணக்கு நூல் ஆனது! Today, It is Official;
வ. உ. சி = விடுதலையான பின், வரவேற்க யாருமில்லை!
(காங்கிரஸ் கட்சியே, அவரைக் கைவிட்டு விட்டது என்பது தனிக் கதை)
எனினும், தம் சொந்தச் செலவில், கொஞ்சம் கொஞ்சமாய் இன்னிலை நூலைப் பதிப்பித்தார்;
வறுமை/ வெறுமை! = அதிகம் முடியலை!:(
VOC didn't have a "social networking" in the field of Tamizh;
His approach is more Frankness & Justice, rather than "self seek"
ஆனா... இத்தோடு விட்டால் தான் பரவாயில்லையே!
வ.உ.சி குடுத்த "தரவுகள்" = உறுத்திக் கொண்டே இருக்கு போலும், பண்டிதர்களுக்கு!:)
--- வ.உ.சி -க்கு ஏடு குடுத்தவர் = திருமேனி இரத்தினக் கவிராயர்;
இவரு "பழைய நடையில்" தாமே கற்பனையாப் பாட்டெழுதி, அதைத் தான் "இன்னிலை" -ன்னு புகுத்தி விட்டார்---
Ha Ha Ha; எப்படி இருக்கு கதை? "அசுரன்" ஆக்கீட்டோம்-ல்ல? டொன் டொன் டொய்ய்ங்...
இ.வை. ஐய்யர் காட்டியதில், சிதைஞ்சி போன பாட்டு = 18 இருக்கு;
கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்......கரும்
என்னா புரியுதா?:) ஆனா, இதையெல்லாம் எவருமே கேள்வி கேட்கலை;
"Official தமிழ்ப் பண்டிதர்கள்", ஒன்று கூடி உரைத்த வாசகம்:
மற்ற 17 கீழ்க் கணக்கு நூல்களின் நடை = வ.உ.சி காட்டிய இன்னிலையில் இல்லை = எனவே, இது பொய்யான புகுத்தல்!
திருக்குறளின் நடை, பழமொழி நானூறில் இல்லீயே; அது மட்டும் எப்படி 18 கீழ்க் கணக்கு?
= Ha ha ha! விடுய்யா, விடுய்யா..
= Twitter/ Blog-ல கேக்குறதெல்லாம் "சபை" ஏறுமா? ஒம்ம கிட்ட Official Network இருக்கா?:)
------------------------
சொந்தக் காசையெல்லாம், தேச பக்தியில் தொலைச்சிட்டு, மாடு போல் செக்கிழுத்து...
இன்னிக்கி தனி மரமாய் நிக்கும் வ.உ.சி = "பொய்" சொல்லிட்டாரு-ன்னே வச்சிப்போம்............
* ஆனா, "இன்னிலை" -ன்னும் அந்த வெண்பாவில் இருக்கேப்பா? = ஓய், அதெல்லாம் கேக்காதீங் காணும்;
* சரிப்பா, இன்னிலை வேணாம்! ஆனா வடசொல் மிகுந்த "கைந்நிலை", 18 நூலில் ஒன்னு என்பதற்கு தரவு? = என்ன ஸ்வாமி, தரவெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீரு?:)
அதான் இன்னிலை அல்ல-ன்னு... "குழுவாச் சேர்ந்து" சொல்லீட்டோமே!
So, 18ஆம் நூல் = கைந்நிலையே! <சுபம்>
முருகா,
* செக்கை மாடு போல் இழுத்த செல்வந்தன் = அவனா பொய்யாப் பாட்டெழுதிப் புகுத்துவான்?
* British Government -உடன் சமரசம் செய்து கொண்டே விடுதலைப் போர் செய்யத் தெரியாதவன்;
* இடைக்கால British அரசில் முதலமைச்சர் "வ.உ.சி-ஜி" ஆகாதவன் = அவனா பொய்ப் பாட்டு புகுத்துவான்?
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
ஆனாலும்...
தன்னைக் கைவிட்ட தமிழை = வ.உ.சி கைவிடவில்லை!
அவர் இறுதிக் காலத் "தனிமை"யில் = ஒரே ஆறுதல், தமிழ்!
*தொல்காப்பியத்துக்கு உரை எழுதினார்;
*சிவ ஞான போதம் என்ற நூலுக்குச், சமயம் கடந்து, "அன்பே சிவம்" என்று முன்னிறுத்தி, புது உரை செய்து கொடுத்தார்;
இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எல்லாம்... இன்று காணாமலேயே போய்விட்டன:(
ஏதோ... நடிகர் திலகம் சிவாஜி... நடித்து (உயிர்த்துக்) குடுக்க... "கப்பலோட்டிய தமிழன்" என்ற நினைவாச்சும் தங்கியிருக்கு!
சினிமா மட்டும் இல்லீன்னா.. வ.உ.சி = இன்னிக்கி யாரோ!:(
* "அ முதல் ஹ" வரை 48 சம்ஸ்கிருத எழுத்தே = 48 சங்கப் புலவர்களா பிறவி எடுத்துச்சி;
49-வதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு -ன்னு "திருவிளையாடற் புராணம்" எழுதிய "தமிழ்க்" குழு அல்லவா?
* தமிழ்த் தொன்ம முருகனை -> புராணக் கதைகள் ஏற்றி ஏற்றி..
சுப்ரமணியன் ஆக்கிய "தமிழ்ப்" பண்டிதர்கள் அல்லவா!
= இந்தக் "குழு அரசியல்"-ல்லாம் கடந்து வந்து தான்...
= இன்னிக்கும் நிக்குது தமிழ்!!!
சொற்பமான அறிஞர்கள், இன்றும், "இன்னிலை - கைந்நிலை", இரு நூல்களையும் ஒருங்கே வைத்துத் தான், படிக்கின்றனர்; ஆனால்....
* "Officially", கைந்நிலையே = 18 கீழ்க் கணக்கு!
* (இன்னிலை அல்ல என்று ஆக்கப்பட்டு விட்டது)
அதனால் என்ன? = இன்னிலையும் தமிழ்த் தாய்க்கு அணிகலனே!
* தான் ஒடுங்கிப் போன நிலையிலும்...
* தமிழ் ஒடுங்கிப் போகாமல்,
தமிழுக்கு "இன்-நிலை" தேடித் தந்தவனே!
தூத்துக்குடி தந்த தூயோனே; வ.உ.சி = உன் "தோல்வித்-தமிழ்" வாழ்க!!
ஆனால்... அது மட்டுமே அல்ல!
கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும், உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி"
அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!
என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு தெரியுமா?
Only very few ppl. know; Why?
Thatz the sad story of tamil media world:(
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
vs தமிழ்ப் பண்டிதர் திரு. அனந்தராம ஐய்யர்
"ஐய்யர்" -ன்னு எழுதிட்டதாலேயே, Twitter பெரிய மனுஷாள், என்னை நோக்கிப் படையெடுக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்:)
ஏற்கனவே 10 மாதங்கள் ஒதுங்கி இருந்து, இப்ப தான் மீண்டு வந்துள்ளேன்...
Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
= இன்றைய Twitter மட்டுமல்ல!
= அன்றே... வ.உ.சி யும் பட்டிருக்காரு, இலக்கணத் தமிழ் வாத்திகளின் கையில்!
கருத்து வேற, மனிதம் வேற!
* நான் சொல்வது = கருத்து மட்டுமே!
* தனி மனிதத் தாக்குதல் = ஒரு போதும் நான் அறியாதவன்!
"KRS-ஐ ஒழிச்சிக் கட்டுங்கோ; பூச்சி மருந்து அடிச்சி ஒழிங்க"
- போன்ற "இட்லிவடை வாசகங்கள்" என் வாயில் வரவே வராது:(
பூச்சி மருந்து அடிச்சி, "என் சாவு"
= Twitter பெரிய மனிதர்களான ஒங்க கையில் இல்லை!:(
அது இன்னொருவன் கையில்!!
எனவே, இதில் உள்ள "தர்ம-நியாயங்களைத்" திருமுருகன் தாளில் வைத்து விடுகிறேன்;
உண்மை, உறுத்து வந்து ஊட்டும்!
அதுவும் தரவோடு வந்தா? = தாங்க முடியாது தான்:)))
* சொல்வது என்ன-ன்னா: தமிழுக்கு நேர்ந்த கொடுமைகள்!
* என் ஏக்கம் = தமிழ் ஏக்கம்: அது.. ஐய்யர் என்றல்ல! யார் செய்தாலும் வரும்.. கலைஞர் உட்பட!
தமிழை = "டுமீல்" என்று எள்ளி விட்டு,
அதே தமிழில் இலக்கணப் பாடம் எடுக்கும் Twitter "வாத்திகள்" யாராயினும் = எனக்கு இதே ஏக்கம் தான்!
இவர்களுக்கு, தமிழ் = "உணர்வுப் பூர்வமானது" அல்ல! வெறும் Rulebook; ஆடு-களம், அவ்வளவே!
உதட்டில் மட்டுமே தமிழ்; உள்ளத்தின் ஆழத்தில் = ??? எள்ளலே!:(
இவங்களை விட்டுருவோம்; மற்றபடி...
தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்"
= யாராயினும்.. பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!
தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
உ.வே. சாமிநாத ஐயர் என்றொரு தமிழ்த் தாத்தா; அவர் திருவடிகள் என்றும் எனக்குத் துணை!
Enough of this digression (or) Introduction.. Let's go & see வ.உ.சி-யின் தமிழ்ப் பஞ்சாயத்து:)
எட்டுக்கால் பூச்சிக்கு = எத்தினி கால்?
மாற்றிக் கேக்குறேன்; "Spider Man"-க்கு எத்தனை கால்?:)
அதே போல்... 18 கீழ்க்கணக்கு = மொத்தம் எத்தனை நூல்கள்?:)
திருக்குறளே மிக்க பரவல் (பிரபலம்)
ஆனால் 18 கீழ்க் கணக்கில் = 18 நூல்கள்!
ஆனா, ஒரே ஒரு நூலில் மட்டும் = "பஞ்சாயத்து"
அந்த 18ஆம் நூல் எதுய்யா? = இன்னிலையா? கைந்நிலையா?
வ.உ.சி vs. அனந்த ராம ஐய்யர்
தமிழில், "தனிப்பாடல்கள்" -ன்னு ஒரு வகை இருக்கு!
அந்த வெண்பா யாரு எழுதுனது-ங்கிற வெவரமெல்லாம் இருக்காது; திடீர்-ன்னு தோன்றி உலாத்தும்!
வெறும் சுவையே அன்றி, அவை நம்பத் தகுந்த ஆதாரம் அல்ல!
எட்டுத் தொகை நூல்கள் என்னென்ன? ஒரு "வெண்பா" இருக்கு
* "நற்றிணை நல்ல குறுந்தொகை" -ன்னு தொடங்கும்;
* அந்த நூல்கள் பலருக்கும் தெரியும்; தனிப்பாடல் is just a memory tip;
அதே போல், 18 கீழ்க் கணக்கு நூலுக்கும் ஒரு தனிப்பாடல்!
= ஆனா, அதுல தான் பிரச்சனையே!:) வெண்பாவைப் பாருங்க..
நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை, முப்
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலையகாஞ்சியோடு,ஏலாதி என்பவே,
கைந்நிலையவாம்கீழ்க் கணக்கு
எவன் எழுதித் தொலைச்ச வெண்பாவோ? கணக்கு இடிக்குது:) List போடுங்க பார்ப்போம்!
நாலடியார், நான்மணிக்கடிகை | 2 |
நா நாற்பது: (இன்னா, இனியவை, கார், களவழி) | 4 |
ஐந் திணை: ஐந்திணை 50, திணைமொழி 50, ஐந்திணை 70, திணைமாலை 150 | 4 |
முப்பால் (திருக்குறள்) | 1 |
திரிகடுகம், ஆசாரக் கோவை | 2 |
பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம் | 2 |
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி | 2 |
17 |
Already 17 taken; What is the 18th?
= ஆனா, வெண்பா-வில் இன்னும் ரெண்டு Balance இருக்கு!:)இன்னிலைய -ன்னும் இருக்கு;
கைந்நிலைய -ன்னும் இருக்கு;
ஆனா, கூட்டினா = 18 வரணுமே! 17 + 2 = 18 ???
எந்தப் பொலவன்-யா Basic Mathematics தெரியாம, "வெண்பா" பாடி, உயிரை வாங்குறான்?:)
சங்கம் மருவிய காலம்; அந்த 18ஆம் நூல் எது? = இன்னிலையா? கைந்நிலையா??
அதாம்பா இது -ன்னு வாழைப்பழத் தீர்ப்பு சொல்ல முடியாது:) ரெண்டும் வெவ்வேறு நூல்கள்!
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்வது = இன்னிலை;
* இ.வை. அனந்தராம ஐய்யர் சொல்வது = கைந்நிலை;
தமிழ்த் தாத்தா உ.வே.சா ஓலை திரட்டினாரு -ன்னு பலரும் பேசிப் பேசி, அதுவே நிலைத்து விட்டது;
ஆனா அவரைப் போலவே, அவருக்கும் முன்பே...ஈழத் தமிழர் சி.வை. தாமோதரம் பிள்ளை = கேள்விப்பட்டு இருக்கீயளா?
* உ.வே.சா இலக்கியம் திரட்டினாரு-ன்னா,
* சி.வை.தா இலக்கணம் திரட்டினாரு;
தொல்காப்பியம் முழுசும் திரட்டினாரு;
இன்றுள்ள பல இலக்கண நூல்கள், உரை நூல்கள் (சேனாவரையர்/ நச்சினார்க்கினியர்), கலித்தொகை, சூளாமணி -ன்னு...
சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பித்தவர் = சி.வை.தா
இவரும் தமிழ்த் தாத்தா தான்!
ஆனா பொது மக்களுக்குத் தெரியாது; ஏன்-னா பரப்புரை இல்லை:(
அதற்காக உ.வே.சா-வை நான் குறைத்து மதிப்பிடுவதாக கும்மி அடிக்க வேண்டாம்:)
என்றும் அவர் = நம் தமிழ்த் தாத்தா!
சொல்ல வரும் கருத்து: ஒன்றை மட்டுமே பரக்கப் பேசினால் வரும் நிலை:(
Oops.. என்ன சொல்ல வந்தேன்-ன்னா.. உ.வே.சா / சி.வை.தா அளவுக்கு இல்லீன்னாலும்...
நம்ம வ.உ.சி யும் ஓலை திரட்டி இருக்காரு; தெரியுமா??
* ஆனா, வெளியே போய், அதிகம் திரட்ட முடியலை = சிறை வாசம்;
* செக்கிழுத்து வெளி வந்த பின்போ = நோய் வாசம்!
18 கீழ்க் கணக்கு: வ.உ.சி காட்டிய ஓலைச் சுவடிகள் = இன்னிலை!
ஆனால்.... ஆனால்....
இ. வை. அனந்தராம ஐய்யர் = ஒரு தமிழ்ப் பேராசியர்!
நட்பு வட்டச் செல்வாக்கு மிக்கவர்;
இவரும், சில சுவடிகள் வச்சிருக்காரு; மொத்தம் 45 பாட்டு; அதிலே கூட 18 பாட்டு = பாதி தான் தெரிவன!
ஆங்காங்கு சொற்களே இல்லை; சம்ஸ்கிருதச் சொற்களும் அதிகம் என்பதும் மறைக்காது சொல்லியாகணும்!
இவரைச், சேது சமஸ்தான வித்வான், உ.வே. இராகவ ஐயங்கார் அவர்களும் பலமாக வழிமொழிகிறார்;
அம்புட்டு தான்...........
எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
= Power of "Networking", even in Tamizh:(
உ.வே. இராகவ ஐயங்கார் = பெரும் அறிஞர் என்பதையும் மறைக்காது சொல்லி ஆகணும்! கம்பனில் குளித்தவர்;
"வடமொழிக் காளிதாசனை"த் தமிழுக்குள் கொண்டு வந்தவர் = "அபிஞான சாகுந்தலம்";
* ஒரு புறம் = சிறை விட்டு வெளியே வந்து.. நொடிந்து போன வ.உ.சி
* மறு புறம் = சமஸ்தான வித்வான்கள் & தமிழ்ப் பண்டிதர் குழாம்
ஐய்யய்யோ, இப்படிப் பத்திக்கிச்சே; உம்ம்ம்... யாரு சொல்வது சரி?
வேண்டாம், தனி மனிதப் போக்கை விட்டுருவோம்...
* "யாரு?"-ன்னு கேள்வி வேணாம்!
* "எது?" -ங்கிற கேள்வி கேட்போம்! => எது 18 கீழ்க் கணக்கு??
தனிப்பட்ட சுவடி எல்லாஞ் சரி தான்; ஆனா..
18 கீழ்க் கணக்கிலே, அந்தச் சுவடி சேர்த்தி என்பதற்கான ஆதாரம்? = யாருக்குமே கிடைக்கலை;
வ.உ.சி மட்டும் அரும்பாடுபட்டு, gave an "indirect" proof
= தொல்காப்பிய நூற்பா 113;
= அதற்கு, ஓலைச் சுவடியின் 5ஆம் செய்யுளை, மேற்கோள் காட்டியுள்ளார் பண்டைய உரையாசிரியர்;
யாப்பருங்கல விருத்தி உரையிலும், இன்னிலை 2ஆம் செய்யுள், மேற்கோள் காட்டப்பட்டு இருக்கு;
ஆனால், தரவு இருந்தும்... அன்றைய செல்வாக்கு???
** பதிப்பகம்/ தமிழ் வித்வான்கள் = வ.உ.சி யை ஒப்புக் கொள்ளாது, அனந்த ராம ஐய்யர் பக்கமே "அணி" திரண்டனர்!
** இ. வை. ஐய்யர் தரவே தரலீன்னாலும்... வடசொற்கள் மிகுந்த ஏடு = கைந்நிலை: 18 கீழ்க் கணக்கு நூல் ஆனது! Today, It is Official;
வ. உ. சி = விடுதலையான பின், வரவேற்க யாருமில்லை!
(காங்கிரஸ் கட்சியே, அவரைக் கைவிட்டு விட்டது என்பது தனிக் கதை)
எனினும், தம் சொந்தச் செலவில், கொஞ்சம் கொஞ்சமாய் இன்னிலை நூலைப் பதிப்பித்தார்;
வறுமை/ வெறுமை! = அதிகம் முடியலை!:(
VOC didn't have a "social networking" in the field of Tamizh;
His approach is more Frankness & Justice, rather than "self seek"
ஆனா... இத்தோடு விட்டால் தான் பரவாயில்லையே!
வ.உ.சி குடுத்த "தரவுகள்" = உறுத்திக் கொண்டே இருக்கு போலும், பண்டிதர்களுக்கு!:)
--- வ.உ.சி -க்கு ஏடு குடுத்தவர் = திருமேனி இரத்தினக் கவிராயர்;
இவரு "பழைய நடையில்" தாமே கற்பனையாப் பாட்டெழுதி, அதைத் தான் "இன்னிலை" -ன்னு புகுத்தி விட்டார்---
Ha Ha Ha; எப்படி இருக்கு கதை? "அசுரன்" ஆக்கீட்டோம்-ல்ல? டொன் டொன் டொய்ய்ங்...
இ.வை. ஐய்யர் காட்டியதில், சிதைஞ்சி போன பாட்டு = 18 இருக்கு;
கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்......கரும்
என்னா புரியுதா?:) ஆனா, இதையெல்லாம் எவருமே கேள்வி கேட்கலை;
"Official தமிழ்ப் பண்டிதர்கள்", ஒன்று கூடி உரைத்த வாசகம்:
மற்ற 17 கீழ்க் கணக்கு நூல்களின் நடை = வ.உ.சி காட்டிய இன்னிலையில் இல்லை = எனவே, இது பொய்யான புகுத்தல்!
திருக்குறளின் நடை, பழமொழி நானூறில் இல்லீயே; அது மட்டும் எப்படி 18 கீழ்க் கணக்கு?
= Ha ha ha! விடுய்யா, விடுய்யா..
= Twitter/ Blog-ல கேக்குறதெல்லாம் "சபை" ஏறுமா? ஒம்ம கிட்ட Official Network இருக்கா?:)
------------------------
சொந்தக் காசையெல்லாம், தேச பக்தியில் தொலைச்சிட்டு, மாடு போல் செக்கிழுத்து...
இன்னிக்கி தனி மரமாய் நிக்கும் வ.உ.சி = "பொய்" சொல்லிட்டாரு-ன்னே வச்சிப்போம்............
* ஆனா, "இன்னிலை" -ன்னும் அந்த வெண்பாவில் இருக்கேப்பா? = ஓய், அதெல்லாம் கேக்காதீங் காணும்;
* சரிப்பா, இன்னிலை வேணாம்! ஆனா வடசொல் மிகுந்த "கைந்நிலை", 18 நூலில் ஒன்னு என்பதற்கு தரவு? = என்ன ஸ்வாமி, தரவெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீரு?:)
அதான் இன்னிலை அல்ல-ன்னு... "குழுவாச் சேர்ந்து" சொல்லீட்டோமே!
So, 18ஆம் நூல் = கைந்நிலையே! <சுபம்>
முருகா,
* செக்கை மாடு போல் இழுத்த செல்வந்தன் = அவனா பொய்யாப் பாட்டெழுதிப் புகுத்துவான்?
* British Government -உடன் சமரசம் செய்து கொண்டே விடுதலைப் போர் செய்யத் தெரியாதவன்;
* இடைக்கால British அரசில் முதலமைச்சர் "வ.உ.சி-ஜி" ஆகாதவன் = அவனா பொய்ப் பாட்டு புகுத்துவான்?
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
![]() |
வ.உ.சி - இறுதி யாத்திரை |
ஆனாலும்...
தன்னைக் கைவிட்ட தமிழை = வ.உ.சி கைவிடவில்லை!
அவர் இறுதிக் காலத் "தனிமை"யில் = ஒரே ஆறுதல், தமிழ்!
*தொல்காப்பியத்துக்கு உரை எழுதினார்;
*சிவ ஞான போதம் என்ற நூலுக்குச், சமயம் கடந்து, "அன்பே சிவம்" என்று முன்னிறுத்தி, புது உரை செய்து கொடுத்தார்;
இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எல்லாம்... இன்று காணாமலேயே போய்விட்டன:(
ஏதோ... நடிகர் திலகம் சிவாஜி... நடித்து (உயிர்த்துக்) குடுக்க... "கப்பலோட்டிய தமிழன்" என்ற நினைவாச்சும் தங்கியிருக்கு!
சினிமா மட்டும் இல்லீன்னா.. வ.உ.சி = இன்னிக்கி யாரோ!:(
* "அ முதல் ஹ" வரை 48 சம்ஸ்கிருத எழுத்தே = 48 சங்கப் புலவர்களா பிறவி எடுத்துச்சி;
49-வதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு -ன்னு "திருவிளையாடற் புராணம்" எழுதிய "தமிழ்க்" குழு அல்லவா?
* தமிழ்த் தொன்ம முருகனை -> புராணக் கதைகள் ஏற்றி ஏற்றி..
சுப்ரமணியன் ஆக்கிய "தமிழ்ப்" பண்டிதர்கள் அல்லவா!
= இந்தக் "குழு அரசியல்"-ல்லாம் கடந்து வந்து தான்...
= இன்னிக்கும் நிக்குது தமிழ்!!!
சொற்பமான அறிஞர்கள், இன்றும், "இன்னிலை - கைந்நிலை", இரு நூல்களையும் ஒருங்கே வைத்துத் தான், படிக்கின்றனர்; ஆனால்....
* "Officially", கைந்நிலையே = 18 கீழ்க் கணக்கு!
* (இன்னிலை அல்ல என்று ஆக்கப்பட்டு விட்டது)
அதனால் என்ன? = இன்னிலையும் தமிழ்த் தாய்க்கு அணிகலனே!
* தான் ஒடுங்கிப் போன நிலையிலும்...
* தமிழ் ஒடுங்கிப் போகாமல்,
தமிழுக்கு "இன்-நிலை" தேடித் தந்தவனே!
தூத்துக்குடி தந்த தூயோனே; வ.உ.சி = உன் "தோல்வித்-தமிழ்" வாழ்க!!