Quantcast
Channel: மாதவிப் பந்தல்
Viewing all articles
Browse latest Browse all 53

கோதைத்தமிழ்28: ஓம் என்றால் என்ன? @FamousLadyTwitter

$
0
0
மக்கா வணக்கம்! இன்னிக்கி பேசப் போவது பிரபல பெண் ட்வீட்டர்! ஆனாப் பேரைச் சொல்லக் கூடாது-ன்னு எனக்கு உத்தரவு!:)

விடிய விடியக் கதை கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா-ன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா சின்னம்மா-ன்னு சொல்லலாமா? உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன்:))

ஆனா கடினமான Clue குடுக்கலாமாம்! என்னத்த குடுக்க?

* இவிங்க நல்லவுக, வல்லவுக, சேவல் பண்ணைச் சண்டை போடுபவக!
* துரைமாருங்க புத்தகமாவே படிச்சி, Status Update கீச்சிக் கீச்சியே பிரபலமானவங்க!
* கண்ணாலப் பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுவது போல் சீன் போட்டு, காதல் தூரம் ஓடுபவக....:))
* அப்பாவிகளான என்னையும், @4sn செ.வையும் அடிக்கடி வம்பு பண்ணுபவுக

Any More Difficult Clues??:) கண்டு புடிச்சாச்சா?:)))
அம்மிணி பேசுவதைக் கேளுங்க!
பாசுரத்தின் முதல் வரிக்கு மட்டுமே இத்தனை நுட்ப நுண்ணிய விளக்கம்! மத்த எல்லா வரிக்கும் குடுக்க ஆரம்பிச்சா?



நன்றி அம்மிணி!:) எங்க கிராமத்தின் சாயலை அப்படியே அணுகிப் பேசியமைக்கு!
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்! பொங்கலுக்கு கிராமத்துக்கு போனது போல் ஒரு Effect இப்பவே கிடைச்சிருச்சி!:)



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்"இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்"இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,


உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:கறவை மாடுகளுக்குப் பின்னாலேயே சென்று, காட்டை அடைந்து, அனைவரும் சேர்ந்து உண்போம்!
இப்படி, மாட்டை நாங்கள் முன் நடத்திச் செல்லாமல், மாடு எங்களைப் பின் நடத்திச் செல்கிறது! இப்படியான அறிவில்லா ஆயர் குடி!

அதில் நீ வந்து தோன்றினாயே கண்ணா! என்ன புண்ணியஞ் செய்தோமோ? குறை ஒன்னுமே சொல்ல முடியாத கோவிந்தனே!
நீ - உறவு - நான்! = இதை யாராலும் ஒழிக்க முடியாது! ஒழித்தாலும் ஒழிக்க ஒழிக்க ஒழுகும்! நம் உறவு என்னைக்கும் இருக்கும்!

ஏதோ ஆயர் குடிப் பசங்க, அறிவில்லாமப் பேசினா, அதையெல்லாம் மனசுல வச்சிக்காதேடா! நீயே எங்களுக்கு எல்லாமும்! நீயே பறை தருவாய்! எங்களை ஏற்றுக் கொள் பெருமானே!



இன்றைய எழிலான சொல் = உன் தன்னோடு-உறவேல்-நமக்கு!

என்னடா இவ்ளோ பெரிய சொல்லா?-ன்னு பாக்குறீங்களா? - இது தமிழ் மந்திரச் சொல்! ஓங்காரத்தைக் குறிப்பது!

ஓம் என்பது வடமொழி அல்ல! அது ஒரு ஒலிக் குறிப்பு மட்டுமே!
அது பல மொழிகளிலும் இருக்கு, சமணம், சீக்கியம் போன்ற சமயங்களிலும் இருக்கு! அதை, கோதை தமிழில் காட்டுகிறாள்!

முன்பு அப்பாவுக்குப் பாடஞ் சொன்ன என் முருகன், என்ன சொன்னான்? = யாரும் சொல்ல மாட்டாங்க!:)
பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான்-ன்னு சொல்லுவாங்களே தவிர, அது என்ன பொருள்-ன்னு மூச்சு விட மாட்டாங்க!
ஏன்னா ரகசியமாம்! வேதம் படிக்கறவா மட்டும் தான் தெரிஞ்சுக்கணுமாம்!:)

ஆனா, கோதையிடம் இந்தச் சட்ட திட்டம் எல்லாம் வேலைக்காவாது!
எல்லாரும் அவனை அடைய வேணும்-ன்னு நினைப்பவள்!
தான் நரகம் புகினும், மற்ற அனைவரும் திருநாடு புகுவார் அல்லவா என்று பின்னாளில், ஒருவரை, இதுவே கோபுரம் ஏறிப் பேச வைத்தது!

ஓம் = அ + உ + ம்
* அ = 'அ'வன்
* ம் = நா'ம்'
* உ = 'உ'றவு

அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னைக்கும் இருக்கு! அதை அவனே நினைச்சாலும் ஒழிக்க முடியாது! = அதான் ஓம்!
வேதங்கள்/ தமிழ் மறைகளின் உயிர் நாடி = ஓங்காரம்! மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி...என்பர்!

* அம்மா மேல புள்ளைக்கு ஆத்திரம், நீயெல்லாம் அம்மாவா?-ன்னு புதுப் பொண்டாட்டி பேச்சில் மயங்கி அவளை மறுதலிக்கலாம்!
* புள்ளை மேல் அம்மாவுக்கு கோவம்! உன்னைப் போய் பெத்தேனே-ன்னு அழுவலாம்! ஆனா அம்மா-பிள்ளை உறவு? அதை அழிக்க முடியுமா?

அவ தொடர்பையே அறுக்கணும்-ன்னு, அவன் போய், ஆயிரங் கோடி செலவழிச்சாலும், தன்னோட DNAவை மாத்திக்க முடியுமா?:)

* எப்படி DNA-வை மாத்த முடியாதோ, அப்படி ஓங்காரத்தை மாத்த முடியாது!இறைவனாலும் முடியாத ஒரு செயல்-ன்னா, இது ஒன்னு தான்!
நமக்கும் அவனுக்குமான உறவை, அவனே நினைச்சாலும் அழிக்க முடியாது! ஒழிக்க ஒழியாது என்கிறாள் கோதை!

இதுவே முருகன் சொன்ன ஓங்காரப் பொருள்!
மத்த விளக்கமெல்லாம் சும்மா தத்துவம்! அ-உ-ம=பிரம்மா-விஷ்ணு-சிவன், மேல்பாகம்-வயிறு-அடிப்பாகம், குண்டலினி ன்னு எல்லாம் ஏதோ சொல்லுவாய்ங்க!
Juz Forget It! Those are Latter Day Hypes for Om!
ரொம்ப தத்துவமெல்லாம் இல்லாம, இறைவனிடம் நம் உறவை முன் வைப்பதே ஓம்! = தமிழ்ப் பொருள்!

ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம் 
= உன்தன்னோடு + உறவேல் + நமக்கு!

நாளை முத்தாய்ப்பாக நான் முடிக்கிறேன்!
30ஆம் பாசுரத்தை, நற்றமிழ் அறிஞர், இராம.கி. ஐயாவின் உரையோடு, இந்த #TamilTwittersPodcast என்னும் தமிழ்த் தேர், அசைந்து நிலைக்கு வரும்!

Viewing all articles
Browse latest Browse all 53

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!