Quantcast
Channel: மாதவிப் பந்தல்
Viewing all 53 articles
Browse latest View live

கோதைத்தமிழ்14: புழக்கடை @raguC

$
0
0
மக்கா, இன்னிக்கி பேசறவரு தமிழ் ஆர்வலர் மட்டுமில்ல! தண்ணி ஆர்வலரும் கூட! அட... நான் சொல்லுறது நீர்ப்பாசனத் தண்ணி-ங்க:)
அணை - மதகு - பாசனம் - அறிவியல் ன்னு அவர் பதிவுகளை வாசிங்க தெரியும்! இதோ @raguC உங்கள் முன்பு!

14-thirupaavai-@raguc

நன்றி ரகு! இயல்பான, செறிவான பேச்சு!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.


மேலோட்டமான பொருள்:ஏன்டீ, உங்க புழக்கடையில், ஒரு சின்ன குளம் இருக்கே! அதுல தாமரைப் பூவெல்லாம் பூத்து, ஆம்பல் (அல்லி) பூவெல்லாம் கூம்பிருச்சி! இன்னுமா எழுந்திருக்கலை நீயி?

செங்கல் வண்ணத்துல கூறை உடை உடுத்திக்கிட்டு, பல வெள்ளை மனசு முனிவர்கள், கோயில் நோக்கி சங்கு ஊதிக்கிட்டே போறாங்கடீ!

என்னமோ எங்களையெல்லாம் எழுப்பி விடுவேன்-ன்னு வாய் மட்டும் பேசின நீயி? வாடீ நாணாத நங்கையே! சங்கு-சக்கரம் ஏந்திக் காட்சி குடுக்கும் கண்ணனைப் பாடி வருவோம்! கிளம்பு கிளம்பு!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = புழக்கடை

இன்றைய நகரா-நரக-நகர வாழ்க்கையில் 2BHK, 3BHK, Patio, Cul-de-sac, Walk-in Closet, இன்னும் என்னன்னமோ சொல்லுறோம்!
புழக்கடை-ன்னா என்ன? எத்தினி பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் வீட்டுல இருக்கு? இல்லை புழக்கடை Patio ஆகி விட்டதா? :)

புழக்கடை = புழை+கடை!
* கடை-ன்னா கடைசி;
* புழை-ன்னா குறுகிய வாயில்!
குறுகிய வாசலைத் தாண்டி, வீட்டின் கடைக் கோடியில் இருப்பது புழக்கடை!

என்ன அழகான தமிழ்க் காரணப் பெயர் பார்த்தீங்களா?
புழக்கடை புழங்கும் கடையும் கூட! சின்ன தோட்டம், குளம் கூட இருக்கும்!
பண்ட பாத்திரங்களை இங்கு தான் பல நேரங்களில் விளக்குவார்கள்!
துணியும் காயப் போட்டுக்கலாம்! புழக்கடையைத் தாண்டினா அடுத்து கொல்லை தான்! கொல்லையில் கழிப்பறைகளும் உண்டு!

புழக்கடை = சின்னப் பசங்க ஒளிஞ்சி விளையாட சூப்பரான இடம்!
கூடை, வைக்கோற் புதர், துணி மேடை, கிணற்றடி-ன்னு ஒளிஞ்சிக்க நிறைய இடங்கள்! கோழிக் கூண்டுல கூட ஒளிஞ்சிக்கலாம்!:) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்!

நாளைக்கிப் பேசப் போறது...ட்விட்டர் பிரபலம்...பல தேர்தல்-லயும் வெல்லும் வீரரு! யாரு? வர்ட்டா?:)

கோதைத்தமிழ்15: ஒல்லை @iamkarki

$
0
0
மக்கா...இன்னிக்கிப் பேசப் போறது ஒரு ட்விட்டர் பிரபலம்! குறும்படப் பிரபலம்! Blog பிரபலம்! - பிராப்லமோ பிராப்லம்:))
வேற யாரு? நம்ம எடுப்பட்ட பய, குஜ்ஜூ குமரன், தோழியின் தோழன் = @iamkarkiதான்!:)

ஆளைப் போல் அல்லாமல், கார்க்கியின் குரலில் மென்மை, என்னைப் போலவே!:)
கார்க்கி = மென் குரல்! இன் குரல்! வசீகரமான குரல்!

அடங்கொய்யால! இவனுக்கு என்னடாத் திருப்பாவை பத்தித் தெரியும்? எந்த மடையன்டா இவனைப் பேசக் கூப்பிட்டது-ன்னு கேக்குறீயளா? ஐயோ! நானில்லை நானில்லை!:))

ஆண்டாளை யாரும் பேசலாம்! எலக்கியவாதி தான் பேசணும் என்பதற்கு தமிழ் ஒன்னும் மேட்டுக்குடியல்ல!
தமிழ் = யாவருக்கும் எட்டும் குடி = எட்டுக்குடி! கேளுங்க கார்க்கித் தமிழில் கோதைத் தமிழை!

15-thirupaavai-iamkarki

நன்றிடா! கலக்கிட்ட கார்க்கி! I enjoyed கார்க்கித் தமிழ்!:)



டூயட் (Duet) முதலில் போட்டது யாரு? = ஆண்டாள்
அட, மெய்யாலும் தாங்க சொல்லுறேன்! கோதை தான் மொத டூயட் போட்டா!
இன்னிக்கி ஒரு டூயட் இல்லாம காதலே இல்லை-ன்னு ஆகிப் போச்சு! :)

இந்தப் புன்னகை என்ன விலை? = எல்லே இளங் கிளியே!
என் இதயம் சொன்ன விலை! = இன்னும் உறங் குதியோ?

அதே மெட்டில், பி.சுசீலாம்மா பாடின மாதிரியே, பாடிப் பாருங்க! ha ha ha! எப்படி இருக்கு?

கோதை போட்ட டூயட் நண்பர்களுக்கு இடையில் தான்! காதல் டூயட் அல்ல! Conversational Tunes, Dialogue Tunes-ன்னு சொல்லுவாய்ங்க!
முதலடி ஒருத்தர் கொடுக்கணும்! அடுத்த அடி இன்னொருத்தர் எடுக்கணும்!

* இந்தப் புன்னகை என்ன விலை? = என் இதயம் சொன்ன விலை!
* இவள் கன்னங்கள் என்ன விலை? = இந்த கைகள் தந்த விலை!
* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ? =  சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!

எப்படி இருக்கு ஆண்டாள் டூயட்? இது போன்று ஆங்கிலப் பாடல்களிலும் உண்டு!
Donna: I work all night, I work all day! = Group: Ain't it sad? That's too bad!
(Mamma Mia Musical)
You are sixteen going on seventeen! = I am sixteen going on seventeen
- என்று Sound of Music-இல் வருவதும் கிட்டத்தட்ட இந்த வகையே!

இது போல பாடல்கள் இப்போ பெரிய விடயமில்லை தான்! ஆனா அந்தக் காலத்தில்? யார் பாடி இருக்கா, 1200 ஆண்டுக்கு முன்னால?
பொதுவா நாட்டுப்புறப் பாட்டுகள் தான் இப்படி இருக்கும்! ஏற்றம் இரைக்கும் போதும், சுமை தூக்கும் போதும் இப்படி மாறி மாறிப் பாடுவாய்ங்க!


* மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே =  தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே!
ஏற்றம் இரைப்பது, நாட்டுப்புற வாழ்வு - இதெல்லாம் கோதை உன்னிப்பா பார்த்திருப்பாள் போல!
அதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்து வருகிறாள்!



* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
# சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்!
* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்!
# வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!

* ஒல்லை நீ போதாய்! # உனக்கென்ன வேறுடையை?
# எல்லாரும் போந்தாரோ? # போந்தார் போந்து எண்ணிக் கொள்!
வல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:

இவள்: எலே, இன்னுமாத் தூங்குற?
அவள்: ச்ச்சீ...சில்ல்-ன்னு கூப்பிடாதங்கடி...இவ்ளோ காலைல! வரேன் வரேன்!

இவள்: ஏய்...நீ எப்படிப்பட்ட தில்லாலங்கடி-ன்னு தெரியும்! எங்க கிட்ட என்ன சொல்லி டபாய்க்கலாம்-ன்னு உன் வாய் முன்னமே திட்டம் போட்டு வச்சிருக்குமே!
அவள்: உக்கும்...நான் ஒன்னியும் இல்ல! நீங்க தான் தில்லாலங்கடி!

இவள்: சரி சரி, சீக்கிரம் வந்து தொலை!
அவள்: எல்லாரும் வந்துட்டாங்களா?

இவள்: தோடா! வந்தாச்சு வந்தாச்சு, வந்து நீயே எண்ணிக்கோ!
அவள்: அன்று மதயானையை அடக்கினானே! எதிரிகளை ஒடுக்கினானே! மாயோன்...அந்தக் கண்ணன் வீட்டுக்குத் தானே போறோம்?

எல்லோரும்: ஆமாம்! தமிழ்க் கடவுளான மாயோனைப் பாடுவோம் வாருங்கள்!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = ஒல்லை!

ஒல்லை வா = வேகமா வா!
சட்-னு வா, சரேர்-னு வா ன்னு சொல்றோம் அல்லவா? அதே போல் ஒல்-என்று வா என்பதும் ஒலிக் குறிப்பு!

இன்னும் சில சொற்கள்:
* எல்லே = எலே, என்ன-லே, வா-லே-ன்னு நெல்லைத் தமிழ்/ தென்பாண்டித் தமிழ்!
* சில்லென்று = சில்-ன்னு குளிரில், சிலிர்க்க அழைக்காதே!

* போந்தாரோ? = போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
போதுதல் என்பது பாவையில் மறுபடி மறுபடி வரும்!
நீராடப் போதுவீர், போதுமினோ, போதராய், போதருகின்றேன், போதருமா போலே, போந்தார் போந்து = இப்படிப் பல "போதுகள்"!

போது என்றால் என்ன? = போதலா? (அ) வருதலா??
=>நீராடப் போதுவீர் = நீராடப் போகின்றவர்களே!
=>போந்தாரோ? போந்து எண்ணிக் கொள் = வந்துட்டாங்களா? வந்து நீயே எண்ணிக்கோ
அப்போ போதுதல் = போ? இல்லை வா? :)

ரெண்டுமே தான்!
போது = Move! It can be either Come or Go!
Can I come with you?ன்னும் கேட்கிறோம்! Can I go with you?-ன்னும் கேக்கறோம்-ல்ல?
அதே போலத் தான்:) முன்னிலை ஒருமை/பன்மை வினைமுற்று!

நாளைக்கு யாரு? = ஆம்ஸ்டர்டாம் ஆளு! ட்விட்டர் அறிஞ்ச அறிஞரு...தமிழ் ஆர்வலர்.....வர்ட்டா?:)

கோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT

$
0
0
மக்கா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முன்பு 2012 ன்னு படம் வந்துச்சு! இப்ப 2012யே வந்துருச்சி:)

முருகனருளால், இப்புத்தாண்டு, அனைவருக்கும் நிம்மதி என்கிற பேரின்பத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்!

ஒவ்வொரு ஆண்டின் முதல் நாளும், British ஆபீசர்களுக்கு என்ன வணக்கம் சொல்வது? நாம, நம்மவனுக்கு வாழ்த்து சொல்லுவோம்-ன்னு துவங்கியதே = Jan 1st திருத்தணிப் படிப்பூசை!
இன்றும் விடாமல் நடக்கும் விழா! ஆங்கிலப் புத்தாண்டு விழா, தமிழ்க் கடவுள் முருகனுக்கு!:)


மார்கழியைத் தொடர்வோமா? இன்னிக்கு பேசப் போவது Amsterdam Arignar!
யாரு? ஒரு விகடனாரைக் முகப்பில் கொண்ட விகடனார் = நம்ம திருமாறன் aka @ThirumaranT

நல்ல தமிழ் ஆர்வலர், ட்விட்டர் தமிழ் முயற்சிகளில் நல்ல புரிதல் உள்ளவர்! என்ன சொல்றாரு-ன்னு கேளுங்க! இதோ...
All thozhis have finished giving missed calls to each other & now assembled in front of Kannan Mall:)

16-thirupaavai-thirumarant

நன்றி திருமாறன்! புத்தாண்டு அதுவுமா உங்க Podcast! உங்கள் சார்பாகவும் வாசகர்களுக்கு இனிய 2012 வாழ்த்துக்கள்!:)



இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த 15 பாடல்கள்!

சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, பெருமாளே-ன்னு சொல்லியாச்!
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டியாச்!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாச்!
* எல்லாரும் நோன்பில்!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்!
* நேரே கண்ணன் வீட்டுக்கு!!

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை


மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:எங்கள் ஊருக்கே நாயகன் = நந்தகோபன்! கூர்வேல் கொடுந்தொழிலன்! கண்ணனின் அப்பா! அவரு தான் ஊர்த் தலைவரு!
அவர் வீட்டைக் காவல் காக்கும் வீரர்களே, உங்களுக்கு வணக்கம்! கதவைத் திறங்கோள்!

எங்களை நேராப் பார்த்து, பறை என்னும் நோன்புச் சாமான் தருவதாக, கண்ணன் நேற்றே வாக்களித்து விட்டான்!
அதனால் நாங்களும் தூய்மையா வந்து, துயில் எழப் பாடுகிறோம்!

சாக்கு போக்கு எதுவும் சொல்லாமல், காவல் வீரர்களே, அவன் கதவைத் திறங்கோள்!
அவன் கதவே நேசக் கதவு! பாசக் கதவு! அதைத் திறந்து, எங்களை அவனுக்குக் காட்டுங்கள்!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = நென்னல்

நெருநல் என்பதன் திரிபு = நென்னல்! (மரூஉ மொழி, மருவிய மொழி)
"நெருநல்" உளன் ஒருவன், இன்று இல்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு - ன்னு குறள்!


* நென்னல் = நேற்று!

நம்ம அண்டை வீடான மலையாளத்தில், நென்னலே-வை, இன்னலெ என்று, இன்னிக்கும் புழங்குகிறார்கள்!
* நேற்று = இன்னெல்
* இன்று = இன்னு
* நாளை = நாள

அதே போல்
* ஓர்ந்து (நினைத்து - ஓர்மையாச்சோ)
* விளி (அழைப்பு - அவள் விளிக்குன்னு)
* நோக்கு (பார்த்தல் - அவன் நோக்கியான்)
* புறம் (வெளியே - ஆயாளு புறத்துப் போயி)
* பறைதல் (சொல்லு,பேசு - எந்தா பறைஞ்சு)

இப்படி, நாம மறந்து போன தமிழ் கூட மலையாளத்தில் இருக்கு!:)
இப்படியான பண்பாட்டு ஒற்றுமை இருந்தும், வீண் மனத்தாபங்கள்!
அணையால் அணைக்க வேணாமா? புத்தாண்டில் புரிதல் வரட்டும்!
------

இந்தப் பாசுரத்தில் "தாள்"-ன்னு இருக்கு பாருங்க! = மணிக்கதவம் தாள் திறவாய்!
இலக்கிய வழக்கோ, பொது வழக்கோ...தாழ்-தாள் இரண்டுமே சரி தான்! பூட்டும் Pin/Latchஐக் குறிப்பவை!
பூங்கதவே 'தாள்' திறவாய்என்ற வைரமுத்து பாட்டும் சரியே!:)

அகராதியில் இருந்து...
தாள் = (புறநானாறு. 395).
Bolt, bar, latch; தாழ்ப்பாள். தம்மதி தாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24). Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; கொய்யாக்கட்டை.
15. Pin that holds a tenon in a mortise; மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும்

தாள் போடு = காலைப் போடு-ன்னு எல்லாம் டபுள் மீனிங் எடுத்துக்கிட்டு....
நமக்குப் பிடிக்கல-ங்கிற ஒரே காரணத்துக்காக எல்லாம்.....
தமிழ்ச் சொற்களை, மொழியை விட்டே துரத்தி விட முடியாது:)

அதே போலத் தான் வாழ்த்துக்கள்!
விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும்…உடுக்கள்=நட்சத்திரங்கள்! அதே போல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள் இரண்டும் சரியான பயன்பாடே!
வாழ்த்து+க்+கள் - கள்ளைக் குடிங்க-ன்னு எல்லாம் டபுள் மீனிங் எடுத்தா, மொழியில் பாதிச் சொல்லைத் துரத்த வேண்டி இருக்கும்!:))

ஒரு மொழியில் சொல் உருவாவது, கரு உருவாவது போல!
பார்த்தீங்க-ல்ல, மலையாளத்தில் எப்படிச் செந்தமிழ்ச் சொற்கள் இருக்கு-ன்னு?:)
நம் அறியாமையால், இருக்கும் தமிழ்ச் சொற்களை எல்லாம், நாமே புறம் தள்ளி விடக் கூடாது! அந்தப் புரிதல் வரவேண்டும்!

* நெருநல் - நென்னல் = New Years Eve
* இன்று = Happy New Year 2012! புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?

$
0
0
மக்கா, இன்னைக்கு பேசுபவருக்குத் தொண்டை கட்டி விட்டது! நேற்றைய New Year Party அப்படி:)
அதனால் இன்றைய Podcast-இல் நீங்களே வாய் விட்டுப் பேசிக் கொள்ளவும்:))

முக்கியமா ஒன்னு சொல்லணும்! இந்தப் பொண்ணுங்க, நேற்றைய பாட்டில் = வாயில் காப்போனைப் பாடினாங்களா? (அ) எழுப்பினாங்களா?

"எழுப்பினாங்க"-ன்னு சொன்னா, அப்பவே காவல்காரர்கள் பணியில் தூங்குற வழக்கம் இருந்திருக்கோ?:)
எதுக்கும் பழைய பாட்டை ஒரு தபா, look விட்டுருங்க!:) எழுந்திராய்-ன்னே வராது! தாள் திறவாய்-ன்னு மட்டுமே வரும்! பரவாயில்லை, Good Watchman of the Day:)


அம்பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!



அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:
* மானம் மறைக்க ஆடை, அப்பறம் குடிக்கத் தண்ணீர், அப்பறம் உண்ண உணவு என்று அறங்கள் செய்யும் தலைவர் நந்தகோபரே எழுந்திருங்கள்!
* பெண்களுக்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே, அம்மா, யசோதை..கண் விழியுங்கள்!

(ஆண்கள் அடிச்சிப் போட்டாப் போலத் தூக்கமாம், அதனால் எழுந்திராய்! பெண்கள் மென் துயிலாம், அதனால் அறிவுறாய்! ஏய் கோதை...என்னாடி நியாயம் இது?:))

* உலகத்தை ஊடாகச் சென்று ஓங்கி உலகளந்தவனே! போதும்! எழு!
* பொற்கழல் வீரரே, அண்ணா பலதேவரே, உங்கள் தம்பியும் நீரும் பாவம்! உறங்கு+ஏல் = கொஞ்சமா உறங்குங்க! உறங்கேல் = தூங்காதீங்க!:)

அடிப்பாவி கோதை...ஏன்டீ மாத்தி மாத்திப் பேசுற?
ச்சே...அவன் பாவம்-ப்பா! அவன் களைப்பு எனக்குத் தான் தெரியும்! தூங்கட்டும்! ஆனா எழுந்து, நம்மை ஒரு பார்வை பாத்துட்டு தூங்கட்டும்!
அறி துயிலோ, அரைத் துயிலோ யார் கண்டது? = உறங்கேல், உறங்கு ஏல்!:))



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = கொம்பன்
இது ஆண்பாலா? பெண்பாலா? 'அன்' வருவதால் ஆண்பால்-ன்னா, கொம்பனார்-ன்னு பெண்களை அல்லவோ சொல்லுறா கோதை?

நீ என்ன பெரிய கொம்பனா?-ன்னு கேக்குறோம்-ல்ல?
பொதுவா ஆண்களை நோக்கி வீசப்படும் இக்கேள்வி, பெண்களுக்கும் பொருந்தும் தான்:) ஆனா வேற பொருளில்!

கொம்பு = கொடி தவழும் கோல்!
அதாச்சும் மென்மையான முல்லைக் கொடிகள், அந்த மென்மைக்கே, கனம் தாங்காமல் தாழும்! சுருண்டு விழும்! அதன் இயல்பு அப்படி!


பெண்களைக் கொடி, இடுப்பை = கொடி இடை-ன்னும் சொல்லுற கூட்டம் நாம!:)
இடுப்பு மென்மையா? சுருண்டு விழுமா?-ன்னு எல்லாம் என்னைக் கேட்காதீங்கப்பா:)
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சிலுக்கின் பேசும் கொடி இடை, அப்பறமா என் முருகனின் அதிபயங்கர வளைவுகள் கொண்ட கொடி இடை! அவ்ளோ தான்:))

மென்மையான முல்லைக் கொடிகளைத் தாங்க, முட்டுக் குடுப்பதற்குப் பேரு = "கொம்பு"!

கொழு கொம்பு இல்லாக் கொடி போல-ன்னு சொல்றோம்-ல்ல சில பேரை!
பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கும்! தாங்கக் கூட ஆதரவில்லாம, துவண்டு கிடக்கும் முல்லைக் கொடிகளை, முருகா, காப்பாத்து!

இந்தக் கொடி தாங்கும் கொம்பு எப்படி இருக்கணும்? = நல்லா குண்டா? திமு திமு-ன்னு?
இல்லை! கொம்பும் மென்மையாத் தான் இருக்கணும்! ஆனா கொடியை விடக் கொஞ்சம் பலமா இருக்கணும்! அப்போ தான் கொடி படரும்!
* ரொம்பக் குண்டா இருந்தா = கொடிக்கு உறுத்தும்!
* ரொம்பப் பொடிசலா இருந்தா = கொடியைத் தாங்க முடியாது!

அதான் "கொழு கொம்பு" = மென்மை + பலம்!
பெண்களை, வெறுமனே கொடி என்று பல கவிஞர்கள் வருணிக்க...
பெண்களை, கொம்பு என்கிறாள் கோதை! = மென்மை+பலம் இரண்டுமே உண்டு பெண்களுக்கு (அ) பெண் மனங்களுக்கு!
கொம்பனார்க்கு எல்லாம் "கொழுந்தே" = குலவிளக்கே = பெண்ணே! எழுந்திரு!

நாளை பேசுபவர்: நீங்களும் நானும் நன்கறிந்த இலக்கியவாதி:) வர்ட்டா?

கோதைத்தமிழ்18: மாதவிப் பந்தல் @OruPakkam

$
0
0
மக்கா, இன்றைய தாமதத்துக்கு மன்னிக்க! நேற்றிரவு தூக்கமில்லை! அதான்:)

இன்று பேசுபவர் யாரு? = இலக்கியவாதி, எழுத்தாளர், மாற்றுச் சிந்தனையாளர், பின் நவீனத்துவ நிபுணர்...பல சிறுகதைப் போட்டிகளின் நடுவர்
= ஸ்ரீதர் நாராயணன் என்னும் @OruPakkam

எனக்குப் பெரும் உற்சாக ஊட்டி! கோர்வையான பேச்சாளர்! நல்ல நண்பர்...
என்னைக் கலாய்ப்பதில் அன்னாருக்கு அளவிலா ஆனந்தம்...இதோ உங்கள் முன்னே!

18-thirupaavai-orupakkam

நன்றி ஸ்ரீதர் அண்ணாச்சி! நீங்க சொன்ன அதே காரணம் தான்! பல குயில்கள் வந்து அவனைக் கூவ வேண்டும் என்பதாலேயே மாதவிப் பந்தல் என்று பெயர் வைத்தேன்:)

இறைவனை நாம் காண்பது ஒரு மகிழ்ச்சி என்றால், பிறரைக் காண வைப்பதில் இன்னொரு மகிழ்ச்சி!
கோயில் தூக்கிகள் அவனைத் தூக்கித் தூக்கி வருவதால் அவர்களால் காண முடியாது! ஆனால் மற்ற எல்லாரும் அந்த ஆனந்த ஆட்டத்தைக் காண முடியும்!

இப்படி, தான் காணாது போயினும், பிறர் காண்பதைக் கண்டே, அந்த மகிழ்ச்சியில் தானும் காண்பது ஒரு தனி ஆனந்தம்! அதுவே மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில்கள் கூவின காண்!


உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி, கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்



பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி, உன் மைத்துனன் பேர் பாடச்,
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!



இன்றைய எழிலான சொல் = மாதவிப் பந்தல்!:)

சிலப்பதிகார டான்சர் மாதவியோட பந்தலா?....இல்லை ராஜ பார்வையில் கமலோட ஜோடி போட்ட மாதவியின் பந்தலா? ஹிஹி!
மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - என்பது நம் கோதைத் தமிழ்!

மாதவி = வசந்தமல்லி/ குருக்கத்தி என்னும் பூ!

அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது!
மாதவிப் பந்தல் மேல், எங்கெங்கு இருந்தோ வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, கீதம் இசைக்கின்றன!

இந்த மாதவிப் பந்தலில் யாவரும் குயில்களே! - அட, நீங்களும் தான்! :)

நாளைய பேச்சாளர் = இளம் வாலிபர்! தில்லித் தமிழர்! என் பால் மிக்க அன்பு கொண்டவர் போலும்:)) வர்ட்டா?

கோதைத்தமிழ்19: கொங்கை @Bala_Bose

$
0
0
மக்கா, வணக்கம்!
நேற்றைய காதல்குளிர்/ காய்ச்சல் குறைந்து விட்டது:) அதனால் இன்று தாமதமின்றி, சரியான நேரத்தில் பதிக்கிறேன்:)

இன்றைய பேச்சாளர்-பையன். பாலசுந்தரம் (எ) @Bala_Bose :)
தமிழ் பால் மிக்க ஆர்வம் கொண்ட பாலா, #365பா-வில் கொட்டும் எழிலான பின்னூட்டங்களே சொல்லி விடும்....இவன் தமிழ் வல்லமையை!

இவனை என்னால் கடிந்து கொள்ளவே முடியாது! ஏன்-ன்னா தில்லியில் உள்ள வடக்குச் சாமிமலைக்கு நெருக்கத்தில் இருப்பவன்! (மலை மந்திர் - உத்தர சுவாமிமலை)
சாமிமலை முருகனின் விபூதிக் காப்பு/ சந்தனக் காப்பில், அவன் இடப்பக்க இதழோரம் மட்டும், லேசாக் கீறி விடுவாங்க!
அப்போ 'குபுக்'-ன்னு சிரிப்பான் என்னவன் முருகன்! அன்று நான் கற்பிழந்தது தான் மிச்சம்!:)

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்,
அகன்றேன் அகலிடத்தார் ஆசாரத்தை,
தன்னை மறந்தேன், தன் நாமம் கெட்டேன்,
தலைப்பட்டேன் நங்கை முருகன் தாளே!

மதுரைப் பையனான பாலா, தில்லிக் குளிரில் என்ன சொல்கிறார்-ன்னு கேளுங்க!:) பால-சுந்தரத்-தமிழ்!

19-thirupaavai-balabose

நன்றி-டா பாலா! விரைவில் பல இனியதுகளுக்கு உனக்கு நல்வாழ்த்துக்கள்:)


குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்,
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்,
வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய்!


மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்?
எத்தனை ஏலும் பிரிவு ஆற்றகு இல்லாயால்?
தத்துவம் அன்று! தகவு! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:குத்து விளக்கு இரவெல்லாம் எரிகிறது! யானைத் தந்தக் காலால் ஆன கட்டில்! அதில் மெத்தென்ற பஞ்சணையில் துயின்று கிடக்கும் கண்ணா!

எப்படித் தூங்குற? அவள் கொங்கையில் முகம் வைத்துக் குழந்தை போல் அல்லவா தூங்குற? காதலனே, கள்ளனே!:) போதும் தூக்கம்! வாய்/வாயில் திற!

யம்மாடி நப்பின்னை...உன் காதலனை எழுந்துக்கவே விட மாட்டியா? அப்படியே உன் கூடவே அவன் ஒட்டிக்கிட்டே இருக்கணுமா?
இது நல்லதுக்கு அல்ல! அவன் அருளை நாடி வந்திருக்கும் எங்களை நினைச்சிப் பாரு! அவனை எழுந்திருக்க விடு!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = கொங்கை!

கொங்கை = மார்பகம்!

இதை, ஏதோவொரு பொதுவில் பேசவியலாச் சொல் போல், சிலர் ஆக்கி விட்டார்கள் இன்று!
ஆனா, சங்கத் தமிழிலும் பின்பும், இது ஒரு சாதாரணச் சொல் தான்!
கண் என்று எப்படிக் கூச்சமின்றிச் சொல்கிறோமோ, அதே போல் தான் கொங்கையும் புழங்குதல் வழக்கம்!

கொங்கு = தேன்!
கொங்கு தேர் வாழ்க்கை, அம் சிறைத் தும்பி தெரியும் தானே உங்க எல்லாருக்கும்!:)
பிறந்த குழந்தைக்கு, தேன் போல் தானாய் வடிந்து சுரப்பதால் = கொங்கை!

அமுதகம் என்ற பேரும் உண்டு! கொங்கை, முலை, தனம், மார்பகம் என்ற இதர பேர்கள்!
இது இலக்கியங்களில் மிக எளிதாகப் புழங்கி வரும் சொல்!
பெண்ணின் பெருமிதங்களுள் ஒன்று! - அவள் அன்பை ஒளிக்காது/மறைக்காது காட்டிக் குடுக்கும் இந்தக் கொங்கையில் அருவெறுப்போ, அசூயையோ ஒன்றுமே இல்லை!

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும் - என்பாள் கோதை!

தடமுலை, கூர்முலை, இளமுலை, நுண்முலை, தண்முலை, அழல்முலை, அமுதமுலை -ன்னு பல இலக்கிய வழக்குகள் உண்டு!

என் கொங்கைத் தலம்! இவை நோக்கிக் காணீர்!
இது கோவிந்தனுக்கு அல்லால் வாயில்போகா!!-என்று பாடுவாள்!
இதை இவள் கண்ணனுக்குச் சொன்னாள்! ஆனா, வேறு சில திருவெம்பாவைப் பெண்கள், நம் ஆண் மகன்களுக்கே சொல்கிறார்கள்!
இவிங்களுக்கு யாரு காதலனா வரணுமாம்? = என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க! காமத்திலும் அப்படியொரு உறுதி, என்னைப் போலவே:))

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரா....
என் முருகவா - என் கொங்கை, நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க! சேரற்க! 
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம் - நாங்கடவா வண்ணமே நல்கு!

நாளை பேசுபவர் - ஒரு தேர்ந்த ட்விட்டர் கவிஞரு! வர்ட்டா?

கோதைத்தமிழ்20: உக்கம்-தட்டொளி @arutperungo

$
0
0
மக்கா, வைகுந்த ஏகாதசி வாழ்த்துக்கள்!
இன்று பேசப் போவது = கவிக்கோ, காதல்கோ, தமிழ்க்கோ!
யாரு? = நான் "கோ" என்று அழைக்கும்....கவிஞரு @arutperungo தான்:)

கோ-வின் காமத்துப்பால் கவிதைகளுக்கு நான் பெரும் ரசிகன்:) இதோ அந்தக் காமம் செப்பாது கண்டது மொழிமோ!:)

அமெரிக்கா விஸ்கான்சினில் வில்லு வண்டியோட்டினாலும், பையனின் வீதி என்னமோ பெங்களூரில் தான்!:)
கோதைத்தமிழில் என்ன சொல்லுறாரு கவிஞரு? நீங்களே கேளுங்க!

20-thirupaavai-arutperungo

நன்றி கோ! கலக்கிட்ட, வழக்கம் போல! காதல் களிப்பான வாழ்த்துக்கள்:)


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!
செப்பம் உடையாய், திறல் உடையாய், செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழாய்!


செப்பென்ன மென் முலைச் செவ் வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை, நங்காய், திருவே, துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:முப்பத்து மூவர் அமரர்களுக்கு என்னென்னமோ பூசைகள்/யாகங்கள் இருக்கு; ஆனா அவர்களா நம்மைக் காக்கிறார்கள்?
அவர்கள் வருவதற்கு முன்பே, அமரர்க்கும் முன் வந்து நிற்பவன், முதல்வன் = பெருமாள்!

எம் துன்பம் தீர்க்கும் பெருமானே துயில் எழாய்!
எம் எதிரிகளை அழிக்காமல், அவர்களுக்கு வெப்பம் மட்டுமே கொடுத்து உணர வைக்கும் முதல்வா துயில் எழாய்!

மென்முலை, செவ்வாய், சிற்றிடை - நப்பின்னைப் பிராட்டியே துயில் எழாய்!
உன் காதலனிடம் விசிறியும் கண்ணாடியும் கொடுத்து அனுப்பு!
எங்களை மார்கழி நீராட்டி, இப்போதே அருள் செய்யுமாறு அவனுக்குச் சொல்லி அனுப்பு!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = உக்கம், தட்டொளி

அது என்ன உக்கம்? உக்கம் சந்த்-ன்னு ஒரு அரசியல்வாதி இருந்தாரு எம்.ஜி.ஆர் கூட! அவரா?:))
அது என்ன தட்டொளி? பேரே பயமா இருக்கே!:))

* உக்கம் = விசிறி (Hand Fan)
* தட்டொளி = கண்ணாடி (Hand Mirror)

எதுக்கு கோதை, இதைப் போயி, நோன்புப் பொருளாக் கேக்குறா? அதுவும் தமிழ்மகள் நப்பின்னையைப் பார்த்து?

ஐயா கட்டிலில் இருந்து, தூக்கக் கலக்கத்தில், அப்படியே வந்துடப் போறாரு! பொண்ணுங்க எல்லாரும் வந்திருக்கோம்-ன்னு சொல்லு தாயீ! அப்போ தான் அலங்காரப் ப்ரியன் அலங்காரமா வருவான்!
* அவனுக்குக் கண்ணாடி காட்டி, முகமும் சிகையும் திருத்தி அனுப்பு!
* அவனுக்கு விசிறி விட்டு, அவனை நல்லபடியா குளிர்வித்து எங்ககிட்ட அனுப்பு! கூல் ஆக்கி அனுப்பு! (Our Kannan is a "Cool" Guy! :)

இந்த உக்கம்-தட்டொளி அவனுக்கு மட்டுமல்ல! நமக்கும் தான்!
நோன்பிருக்கும் பெண்கள்/ ஆண்கள், நெற்றியில் திருமண் எழுதிக் கொள்வது வழக்கம்! அதற்கு கண்ணாடியும், நெற்றி வியர்வையால் கலையாமல் இருக்க விசிறியும் தேவை! அதை அவனே வந்து தங்களுக்கு இட்டு விடுமாறு கேக்குறா இந்தப் பொண்ணு! :)
மேலும் நுட்பமான விவரங்களுக்கு, சுவையான உரையாடல் பதிவு = http://madhavipanthal.blogspot.com/2009/01/20.html

நப்பின்னை = (வடமொழி ஆதிக்கத்தால்) தொலைந்து போன தமிழ்ச் சொத்து!
தமிழ்க் குலமகள், நப்பின்னைப் பிராட்டியார் திருவடிகளே சரணம்!
------

* உக்கம் = உக்குதல் = உகுதல்! (சிறிது சிறிதாய்ப் பொழிதல்)
காற்றை உகுப்பதால் விசிறிக்கு=உக்கம் என்று பேரு!

* தட்டொளி = தட்டு + ஒளி!
தட்டு போல் வட்ட வடிவத்தில், ஒளி பட்டுப் பிரதிபலிக்கும் கண்ணாடி! அதனால் தட்டு+ஒளி = தட்டொளி! இது ஈழத்தில் இன்றும் உள்ளது!

நாளை பேசப் போவது ஒரு நல்ல ட்விட்டர் தகப்பன்! வர்ட்டா?:)



பி.கு:
அதிகாலை! ஒரு முக்கியமான இடம் செல்கிறேன்! வர நள்ளிரவாகும்!
அதனால் அவசரம் அவசரமாக எழுதி, Scheduler-இல் பதிவையும் ட்வீட்டுகளையும் இட்டுச் செல்கிறேன்!
ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க!:) ட்விட்டரில் இப்பதிவைச் சொல்லியும் அருள்க!!

கோதைத்தமிழ்21: வள்ளல் @SeSenthilkumar

$
0
0
மக்கா, வணக்கம்! இன்றைய தாமதத்துக்கு மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன்!
நேற்று அதிகாலை கிளம்பி.......இப்ப தான் வீடு வந்து சேர்ந்தேன்.....இதோ பதிப்பித்து விட்டுத் தூங்கச் செல்கிறேன்!

இன்னிக்கி பேசுறவரு =  ஒவ்வொரு நாளும் ட்விட்டரில் இடையறாது Good Morning சொல்பவர்!
பலரையும் தம்பி என்று அரவணைத்து அழைப்பவர்! பிள்ளைப் பாசம் மிக்கவர்! தமிழுணர்வு கொண்டவர் = யாரு?
= செந்தில்குமார் (எ) @SeSenthilkumar தான்! கேளுங்கள்!

21-thirupaavai-SeSenthilkumar

நன்றி செந்தில் அண்ணே! நீங்களும் என்னை மன்னிக்க!
நான் இல்லாத வேளைகளில் Tweetகளையும் பதிவையும் Schedulerஇல் கொடுத்து விட்டுச் செல்வேன்! ஆனால் இம்முறை முடியவில்லை!
ஆனாலும் சென்ற இடத்தில் பெரும் நிம்மதி + மகிழ்ச்சி! கண் குளிரக் கண்டேன் என்னவன் வாசலை!:)




ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்


தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:கலங்களைக் காட்டியவுடனே பால் பொங்கி வழிகிறது! இப்படியான பசுக்களை உடைய நந்தகோபன் மகனே, எழுவாய்!

நீ அன்பு மிக்கவன், பெருமை மிக்கவன், உலகில் மற்றவர் போல் பிறவாது, "தோன்றியவன்"!
மாற்றார்கள், உன் முன்னே வலிமை இழந்து, வாசலுக்கு வந்து, உண்மை உணர்ந்து நிற்பார்கள் அல்லவா! அது போல நாங்களும் நிற்கிறோம்! எங்களுக்காக எழுவாய்!



இன்றைய எழிலான சொல் = வள்ளல்!

அது என்ன வள்-ளல்? வள்-ன்னு எரிஞ்சு விழுவாரா?:)) இல்லை!
வள் என்பதன் வேர்ச் சொல் = வளம்!
வள்/ வளம் = மிகுதி, அதிகம்

நலமா இருக்கேன்-ன்னா = ஏதோ நலமா இருக்கேன்!
வளமா இருக்கேன்-ன்னா? செழிப்போடு இருக்கேன் அல்லவா!
ஆக வள்/வளம் = மிகுதி!

* மிகுதியாகக் குடுப்பது = வண்மை (வள்ளல்)
* பகுதியாகக் குடுப்பது = கொடை!
நாம குடுத்தா கொடை! கர்ணன் குடுத்தா வண்மை!

இப்படி வளமோடு குடுப்பது வள்ளல் ஆகிறது!
இப்படிக் குடுப்பதற்கு முதலில் மன வளம் வேண்டும்! அடுத்துப் பண வளம் வேண்டும்!
இப்படி மனம் + பணம் = இரண்டு வளமும் உள்ளவர் = வள்ளல்!

முதலேழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் -ன்னு தமிழ் இலக்கியம் பேசும்!
பாரி, ஓரி, நள்ளி, பேகன்....முதலான கடையேழு பேர்!

* மனவளம் (கருணை) மிக்கவர், பசியால் வாடுவோர்க்கு இடையறாது உணவை வடலூரில் எரித்த வள்ளல் = இராமலிங்க வள்ளலார்
* மனவளம் (கருணை) மிக்கவர், 1000 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டோரை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற வள்ளல் = உடையவர் (எ)இராமானுசர்
- பழுத்த நாத்திகர்களான பெரியாரும், பாரதிதாசனும், ஆன்மீக வாதிகளைப் போற்றினார்கள் என்றால், இந்த இருவரை மட்டுமே!

ஆனால்...
மனிதனை வள்ளல்-ன்னு பாடாது....
ஆண்டாள் தான் முதன் முதலாக, ஒரு அஃறிணையை வள்ளல் என்று பாடுகிறாள்!

மாட்டுக்கு மறைக்காது குடுக்கும் மனமும் உண்டு! பால் பொழியும் செல்வ வளமும் உண்டு!
எந்த விலங்கும் ஊருக்கே குடுப்பதில்லை! எனவே மாடு = வள்ளல்!
மாடுன்னாலே செல்வம் தான்! மாடல்ல மற்றையவை!

நாளை பேசப் போவது = ஒரு தமிழ்த் தொழில்நுட்பக் கடல்! வர்ட்டா?:) Sorry again for today's late:)

கோதைத்தமிழ்22: பள்ளிக்கட்டு @mSathia

$
0
0
மக்கா, இன்று பேசப் போவது = தமிழ்க் கணிமையாளர்! தமிழ்த் தொழில்நுட்பவியலர்! தமிழ் ஆர்வலர்!
இவர் மட்டுமல்ல! இவர் மொத்த குடும்பமும் கூட!:)

கதை, கதாபாத்திரங்களை அலசுவதில் வல்லவர்! மாபாரதக் கதைமாந்தர்கள் பற்றிய ஒரு iPhone/Android App (செயலியும்) செய்துள்ளார்!
சத்தியா (எ) @msathiaஎன்ன சொல்லுறாரு கேளுங்கோ...

22-thirupaavai-msathia

நன்றி சத்தியா, அழகிய விளக்கம்! இதைச் சிங்கை வானொலியில் ஒலிபரப்பி விடலாமா?:)


அங் கண் மா ஞாலத்து அரசர், "அபிமான
பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல், வந்து தலைப் பெய்தோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே


செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் "இரண்டும் கொண்டு", எங்கள் மேல் நோக்குதியேல்!
எங்கள் மேல் சாபம் இழிந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:பரந்த உலகத்தின் அரசர்கள் எல்லாம், தங்கள் தற்பெருமை விலகிப் போய், உன் பள்ளிக் கட்டின் கீழே வந்து திரண்டு நிற்கிறார்கள்!
(சென்ற பாட்டிலும் இதையே சொன்னாள்: மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற்கண், ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே)

கால் சதங்கையின் மணிகள், பாதி மூடியும் மூடாமலும் இருக்கும்! அது போல் உன் கண் பாதித் தூக்கம், பாதி விழிப்பில் இருக்கே கண்ணா!

கண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் திறந்து எங்களைப் பாரேன்டா! பகலவனும், பால்நிலவும் ஒரே நேரத்தில் எழுந்தாப் போலே, இரண்டு கண்கள் விழித்து எங்களைப் பார்! எங்கள் சாபங்கள்/துன்பங்கள் எல்லாம் விலகிப் போய் விடும்!
-----------

உவமை நயம்:

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே = கால் சலங்கையில் இருக்கும் சிறுசிறு கிங்கிணிகள்!
ஒவ்வொரு கிங்கிணி வாய்ப்புறமும், பாதி மூடிய தாமரைப்பூ போல இருக்கும்!

அதுக்கு உள்ளாற ஒரு பொட்டு மணி! சல்-சல்-ன்னு சத்தம்!
மணி, ஓட்டையின் வழியாத் தெரியும், ஆனா ஓட்டையில் இருந்தும் விழாது! அப்படி மூடியும் மூடாமலும் இருக்கும்!

ஆண்டாளுக்கு நடனம் தெரியும் போல!
பாதி மூடிய கண்ணுக்கு, சலங்கையின் மணியை உவமை காட்டுறான்னா, இவ எப்பேர் பட்டவளா இருப்பா? Wow! Love you dee, Kothai! :))


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = பள்ளி!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு-ன்னு பாட்டைக் கேட்டிருப்பீங்க! சுள்ளிக்கட்டு தெரியும்! அது என்ன பள்ளிக்கட்டு?

* பள்ளி = பள்ளிக்கூடம் (கல்வி நிலையம்) ன்னு பொதுவழக்கில் ஆகிப் போச்சு!
* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!
* பள்ளி = பள்ளியறை என்பது படுக்கை அறை!
* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை!
இந்தப் பள்ளிகளுக்கெல்லாம் ஒன்னோடவொன்னு எந்தவொரு தொடர்பும் இருக்குறாப் போலத் தெரியலையே! எப்படி எல்லாமே பள்ளி-ன்னு குறிக்குது?

தமிழில், பள்ளி = இடம்!
குறிப்பா, பள்ளத்தில் அமைந்திருக்கும் இடம் = பள்ளி!

வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு! (முக்கூடற் பள்ளு)
பள்ளமான இடம் = பள்ளி!
இப்போ ஒவ்வொன்னாப் பொருத்திப் பாருங்க!

* பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்னாத் தேங்கும் பள்ளம் = பள்ளி! பள்ளியில் உள்ள கூடம்!
* பள்ளி வாசல் = இறைவனின் கருணை பொங்கி வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

* பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி:)

* மடைப் பள்ளி = சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!

எல்லாஞ் சரி, அது என்ன பள்ளிக்கட்டு சபரிமலைக்கு?
பள்ளிக் கட்டில் = பள்ளிக் கட்டு என்று ஆனது!
ஆண்டாளும், வந்து நின் "பள்ளிக் கட்டில்" கீழே, சங்கம் இருப்பார் போல்-ன்னு சொல்லுறாப் பாருங்க!

அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்!  அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!
அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை!
அது சபரிமலையில் இருக்கு! அதான் பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டு! புரியுதா?:)

நாளிக்கிப் பேசப் போவது...பாடகர்! ட்விட்டரின் பாட்டுக்காரர்! வர்ட்டா?:) தூங்கணும்!
(அதென்னமோ தெரியல, இந்த ஊருக்குப் போகும் போதெல்லாம் காய்ச்சல் வந்துருது! காதல் குளிர்:)) சென்ற ஆண்டும், அதுக்கு முன்னரும் கூட இப்படியே!:)

கோதைத்தமிழ்23: கிரந்தம் தவிர் of ஆண்டாள் @lalitharam

$
0
0
மக்கா, இன்னிக்கி பேச வேண்டியவரு -  நம் இசையாளர், இசை விமர்சகர், இசை எழுத்தாளர் - லலிதாராம் (எ) @lalitharam 

திடீர் வெளிநாட்டுப் பயணத்தால், அவர் ஒலிக்கோப்பு இயலவில்லை! மன்னிக்க!
பதிவின் ஒலியை, இந்த ஆளரிப் பெருமாள் என்னும் சிங்கம் முழங்குவதில் கேட்டுக் கொண்டே படிங்க!:)



மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டுப்,


போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று, இங்ஙனே போந்தருளிக், கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம், ஆராய்ந்து அருள்! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: மழைக்கால முடிவு! மலைக்குகை! இதுநாள் வரை உறங்கிய சிங்கம், இரை தேடிப் புறப்படுகிறது!
அது விழிப்புற்று, தீப்போல் பார்த்து, உடல்மயிர் பொங்க, உடலை உதறி, திமிலை நிமிர்த்து, ஒரு முழக்கம் செய்து புறப்படுமே!

அது போல், நீயும் நடக்கிறாய் கண்ணா! பூவைப்பூ வண்ணா!
உன் கோயிலில் எல்லாரும் குழுமியுள்ளோம்!
நீ வந்து, அரியணையில் அமர்ந்து, எங்கள் குறைகளைக் கேட்டருள்! நாங்கள் எண்ணி வந்த காரியங்களையெல்லாம் ஆராய்ந்து, பின்னர் அருள்வாயாக!




இன்றைய எழிலான சொற்கள் பல! அதில் சிறப்பானது = "முழங்கும்"!

குயில் கூவும், மயில் அகவும், புலி உறுமும், யானை பிளிறும்!
சிங்கம் = ???

பலரும் சொல்வது சிங்கம் = கர்ஜிக்கும்!
ஆனால் கோதை அன்றே கிரந்தம் தவிர்க்கிறாள்!சிங்கம் = முழங்கும்! <கிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்>

ஏன்??? கர்ஜிக்கும்-ன்னு சொல்லக்கூடாதா-ன்னு கேட்டா, இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் புழங்கினால் தான், தமிழ்ச் சொற்கள் வாழும்!
இல்லையேல் அப்படி ஒரு சொல் இருக்குது-ன்னு தெரியாமலேயே செத்துப் போகும்! இப்படிப் பறிகுடுத்த சொற்கள் நிறைய்ய்ய.....

வேளாண்மை செத்துப் போயி = விவசாயம்-ன்னு ஆயிருச்சி! சோறு = சாதம் ஆயிருச்சி! விடுதலை = சுதந்திரம் ஆயிருச்சி!
இப்படியாக... ஒவ்வொரு சொல்லாக, தமிழ்ச் சொல் இறப்பு, நம் தமிழுக்குத் தேவையா?

வடமொழி, கிரந்தம் மேல் நமக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை!
வடமொழியும் செம்மொழி தான்!
அதைக் கற்கலாம்! ஆனால் தமிழோடு கொண்டு வந்து கலக்கக் கூடாது! - Learn Everything, But Dont Mix Everything!

தேங்க்யூ மச்சி, ரூமுக்கு வாடா -ன்னு பேச்சளவில் புழங்கினாலும், ரூம், தேங்க்ஸ் என்பதெல்லாம் தமிழ்-ன்னு சொல்லுறோமா?
இல்லை தானே! ஏன்னா நமக்கே தெரியும், அது ஆங்கிலம்-ன்னு!

ஆனா கர்ஜிக்கும், சங்கோஜம் என்பவை தமிழ் அல்ல-னு சொல்லும் போது மட்டும், சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது:)
இவர்களுக்கு - வடமொழிக்கு ஏதும் ஆகாத வரை தமிழ் முயற்சிகள் Okay! வடமொழிக்கு ஏதோ ஆகிடுமோ-ன்னு நிலை வந்தா, தமிழ் முயற்சிகளைக் கும்மியடித்து, எள்ளி நகையாடி, விரட்டுவது ஒரு கலை:))

இந்தக் கலை, ஆண்டாளிடம் எடுபடாது! சிங்கம் முழங்கும் என்றே சொல்கிறாள்! கர்ஜிக்கும் அல்ல!!
இது போல, பல தமிழ்ச் சொற்களைத் தொலைத்து விட்டோம்! ஏன் கிரந்தம் தவிர்க்கணும்? = இந்தப் பதிவைப்பாருங்கள், புரியும்!

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வடசொல்லுக்கும்....இணையான, எளிமையான தமிழ்ச் சொல் என்ன?
- என்பதை இந்தத் தளம் = pulveli.com உங்களுக்குக் காட்டும்! முயன்று பாருங்களேன்!


மற்ற அழகிய தமிழ்ச் சொற்கள்:

* முழைஞ்சு = குகை! (முழை = நுழை! குறுகிய நுழைவாயில் உள்ள அறை = முழைஞ்சு)
* வேரி மயிர் = வேர்க் கால் மயிர்
* மூரி = சோம்பல் முரித்தான்-ன்னு சொல்லுறோம்-ல்ல? அந்த முரி தான் மூரி! மூரி என்பது விலங்கின் திமில் (Hunchback)! அதைச் சோம்பல் முரிக்குதாம் சிங்கம்!
* பூவைப்பூ = கருப்பு வண்ணக் காயாம் பூ


சரி..........நாளிக்கிப் பேசப் போவது யாரு?
எவனோ ஒருத்தன் @kryes-ஆமே! சூடான தலைப்பு வேற! முருகா...வர்ட்டா?:)

கோதைத்தமிழ்24: தமிழ் அர்ச்சனை தேவையா? @kryes

$
0
0
மக்கா, வணக்கம்! இன்னிக்கிப் பேசப் போவது நானு! நானே நானு:) @kryes
So, No Intro! Just listen & Have Fun:)
கோதை 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்யும் தமிழ் அர்ச்சனை - நாம எல்லாரும் தெரிஞ்சிக்கலாமா?

24-thirupaavai-kryes

நன்றிடா @kryes :))
நன்றியை @dagalti க்கு தான் சொல்லணும்! "எல்லாரையும் பேச வைக்கறீக, நீங்களும் பேசுங்களேன்"-ன்னு சொன்னது அவரு தான்:)


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!
இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்!


எனக்கு மிகவும் பிடித்த பாசுரம் இதுவே!
நின் கையில் "வேல் போற்றி"-ன்னு சொல்லுறாளே! பெருமாள் கையில் வேலா? என்னவன் முருகவன் கையில் வேலா? :)))
- கோதை எனக்குன்னு எழுதி இருப்பதாகவே நினைச்சிக்குவேன்!:)




நன்றாக நினைவில் இருத்துங்கள்: சங்கல்பம் + அர்ச்சனை = இறைவனுக்கு அல்ல! நமக்குத் தான்!
யார் பேருக்குச் சங்கல்பம் பண்ணிக்குறாங்களோ, அவங்களுக்குப் புரியணும்-ல? வீர்ய, வீஜய, ஆயுர், ஆரோக்ய, அபிவிருத்தயர்த்தம்-ன்னு, என்ன வேண்டிக்கறோம்-ன்னு நமக்கே தெரியணும்-ல?

இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைச்சி இருக்கா இந்தப் பொண்ணு! மந்திரமா ஓதுவதற்கு என்றே இப்படி!
* முந்தைய பாட்டு - யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்-ன்னு சங்கல்பம்
* இந்த பாட்டு - தமிழ் அர்ச்சனை!

அரசு சட்ட திட்டங்கள் போட்டு விட்டது! = இங்கு தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! :)
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?

சரி, இவ்வளவு  பதிவில் எழுதி விளாசுகிறோமே!  ஆலயத்துக்குச் செல்லும் போது, எத்தனை பேர், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு நாமளே கேட்டுக் கொள்கிறோம்? கையைத் தூக்குங்க பார்ப்போம்:)

வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மன-மலர்ச்சிகள் உருவாவதில்லை!
* மக்களை உணர வைக்கணும்!
** கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்கணும்!
*** நாம தான், எடுத்துச் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்க வேணும்!

அப்படி உணரச் செய்தவர் = இராமானுசர்!
அதனால் தான் இன்றும், திருமால் ஆலயக் கருவறைகளில் தமிழ்ப் பாசுரம்-சாற்றுமறை முழங்குகிறது!
* புறப்பாடுகளில், இறைவனுக்கும் முன்னே, தமிழ் ஓதிச் செல்கிறார்கள்!
* இறைவன் தமிழுக்குப் பின்னால் தான் வருவான்!
* அவனுக்கும் பின்னால் தான், வடமொழி வேதங்கள் ஓதி வருவார்கள்!

மக்களே,
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, சும்மாவாச்சும்.....தமிழ் அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முறை கேட்டுத் தான் பாருங்களேன்!
அப்புறம் நீங்களே விட மாட்டீங்க! ஆ+லயம் = லயம், லயம்-ன்னு லயித்துப் போவீர்கள்! கோதைத் தமிழ் போலவே! :)




இன்றைய எழிலான சொல் = குணில்!

Angry Birds Game-இல் பார்த்து இருப்பீங்களே?:))
உண்டிகோல்-ன்னு சொல்றோம்-ல்ல? மரத்தில் இருந்து கனியை வீழ்த்த, கல்லெறியும் கருவி! அதன் அழகிய தமிழ்ப் பெயர் = குணில்!

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்-ன்னு புறநானூறு!
குணித்தல் = அளவிடுதல்! அளவிட்டு எறிந்து கொய்வதால் = குணில்!

நாளைக்குப் பேசப் போவது, கப்பற் படைத் தளபதி! வர்ட்டா?:)
தமிழ் அர்ச்சனையை நினைவில் நிறுத்துங்கள்!!

கோதைத்தமிழ்25: திருமதி.செல்வம் @anandraaj04

$
0
0
மக்கா...இன்று பேசுவது, ட்விட்டரின் கப்பல் தளபதி, நாலடியார் நாயகர், நம்ம @anandraaj04 (எ) மகிழ்வரசு....பாட்டிலும் மகிழ்-ந்தேலோ ன்னு வருது!:)

இசை விரும்பி, தமிழ் விரும்பி, தத்துவ விரும்பி.....என்ன சொல்றாரு-ன்னு நீங்களே கேளுங்க:)

25-thirupaavai-anandraaj

நன்றி ஆனந்த் (எ) மகிழ்:) உங்கள் சேவை #365பா-க்கு இன்னும் தேவை:)


ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:ஓர் இரவில், ஒருத்தி மகனாய்ப் பிறந்தாய், அன்றிரவே இன்னொருத்தி மகனாய் விரைந்தாய்!
ஆனால் அதையும் பொறுக்க மாட்டாத உன் மாமன், உனக்குத் தீங்கு நினைத்துக் கொண்டே இருக்க, அவன் எண்ணத்தைப் பிழை ஆக்கினாயே!

வயிற்று எரிச்சல்! அதுவே அவன் வயிற்றில் தீ போல் பரவி அவனை விழுங்கி விட்டது!

உன்னை அருச்சனை செய்து வந்தோம்! எங்கள் அன்புக்கு நீ ஏதாச்சும் தர நினைத்தால்...உன் பணி செய்யவே எங்களுக்கு வாய்ப்பு குடு!
திருத்தக்க செல்வம்! திரு=செல்வம்! செல்வத்துக்கே தக்க செல்வம் = உன் உறவு! அதைக் குடு!
வருத்தம் தீர்ந்து, மகிழ்வுடன் பாடுவோம்!



இன்றைய எழிலான சொல் = திருத்தக்க

திருத்தக்க தேவர் -ன்னு ஒருத்தரு! யாரு-ன்னு தெரியும் தானே? சீவக சிந்தாமணி எழுதியவரு!

அது என்ன திருத்-தக்க செல்வம்? திரு-ன்னாலே செல்வம் தானே! செல்வத்துக்கு தக்க செல்வமா? என்ன உளறுகிறாள் கோதை?:)

ஏற்கனவே "நீங்காத செல்வம்"-ன்னு மூன்றாம் பாசுரத்திலும் வரும்!
ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்" & "திருத்தக்க செல்வம்"!

எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்!
ஆனால் யாருக்காக? = நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?

குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?
தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?

கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை!

இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step = மழலைச் செல்வம்!
* சேர்த்த செல்வத்தையே உணர வைக்கும் செல்வம் ஆகையாலே = திரு-வுக்கே தக்க செல்வம் ஆகையாலே திரு+தக்க+செல்வம்!

இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?

அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை!
*** இல்லாத குழந்தைக்கு எங்கிருந்து சேவகம் செய்வாள் தேவகி? ஆனாலும் செய்தாளாம்! எப்படி-ன்னு கேக்கறீங்களா? இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு பாடுவாளாம்! அச்சோ.......

வேணாங்க, நான் சொல்லலை! தேவகி புலம்பல்-ன்னு ஆழ்வார் தனியாகவே பாசுரம் பாடி கண் கலங்கி இருக்காரு!
அப்படித் திருத்தக்க செல்வத்துக்குத் தாலாட்டு பாடிப் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தாள்!

பிள்ளையைப் பறிகொடுத்து நிற்கும் பெற்றோர்கள் பலருக்கும் இந்தப் பாசுரம் ஆறுதல் தரட்டும்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

திருத்தக்க செல்வம் = மற்ற செல்வங்களுக்கெல்லாம் தக்க செல்வம் = உன் உறவு! அதுவே வேண்டும்! அருள்வாய்!


நாளை பேசப் போவது....எங்கள் அபிமான Twitter Sound Service! வர்ட்டா?:)

கோதைத்தமிழ்26: மாலே மணிவண்ணா @kanapraba

$
0
0
மக்கா, இன்று பேசப் போவது, என்றும் 16, எங்கள் @kanapraba!:)
கா.பி என்று நான் செல்லமாக அழைத்தாலும், கானா என்பது தான் உலகப் புகழ்!:)

இசையின் பால் மாறாத காதல் கொண்ட இந்த உள்ளம், அந்த இசையின் வடிவாகவே தன்னை விதம் விதமாக வெளிப்படுத்திக் கொள்கிறது....
அது றேடியோஸ்பதி ஆகட்டும், ATBC வானொலி ஆகட்டும், கானா FM ஆகட்டும்...இந்த Podcastயே ஆகட்டும்....

ஆனா, அந்த இசையினூடே, ஆழ்ந்த தமிழ்ப் பற்று ஒளிந்திருப்பதை, நுட்பமாகக் கவனிப்பவர்கள் அறியலாம்!

ஈழத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வதாக அவர் வாக்குறுதி இன்றும் நிலுவையில் இருக்கு!:)
நான் மிக விரும்பும் இடங்களான.......பன் மதக் கதிர்காமம், கடலை ஒட்டிய மலை திருக்கேதீச்சுரம், வள்ளிபுர ஆழ்வார், நல்லூர்-ன்னு நிறைய!

குறிப்பா ஆனை இறவு = பொன்னியின் செல்வன் முதல் நேற்றைய படுகொலைகள் வரை!
ஈழப் பயணம் கூடி விட்டால், அதற்கப்புறம் எனக்கு வேறேதும் வேண்டாம்! அந்த நல்லூர்க் கந்தனோடு உறங்கி விடுவேன்!

இதோ, கா.பி, உங்கள் முன்னே....
சிவாஜி படப் பாடலான மாலே மணிவண்ணா :) Incidentally Itz திருப்பாவை also:))

26-thirupaavai-kanapraba

நன்றி கா.பி:)
அட, இந்த FM ஆளுங்கள பேசச் சொன்னா, BGM எல்லாம் போட்டு podcasting பேசுறாங்கப்பா!:) - வீணை இசையே இசை!



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே


போல்வன சங்கங்கள், போய்ப் பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:திருமாலே, கருநீல மணிவண்ணா! மார்கழி நோன்பு நாங்க எதுக்கு இருக்கோம் தெரியுமா?
உன் பால் வண்ணச் சங்கு, பறை, விளக்கு, கொடி, விதானம் - இதெல்லாம் எங்களுக்கு வேணும்-ன்னு தான்! அதை அருள்வாயே!

* சங்கில் = உன் எச்சில் அமுதம் இருக்கு!
* பறையில் = நீ எங்களுக்குப் படி அளப்பாய்
* கொடி = உன் உலகப் புகழ்! மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்...
* விளக்கு = இரவில், உனக்கும்-எனக்குமான சாட்சி
* விதானம் = நம் மீது இருக்கும் ஒரே போர்வையாக, மேற் கூரை

இவள் காதலே, என் முருகக் காதலுக்கு உந்து சக்தி!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = மால்!

மால்-ன்னா என்ன? மால் வெட்டு-ன்னு லோக்கலாப் பேசுறோமே அதுவா?:) அல்ல!
திரு.வி.க, முருகன் (அ) அழகு என்னும் நூலில் சொல்வது: "தங்கள் கண்ணுக்கு, பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, "மால்" என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்"

மால் = மயக்கம்! ஆசை!
மாலுதல் = ஆசைப்படுதல், மயங்குதல்!

காட்டில், மயக்கம் அதிகம்!
* மலை வெட்டவெளி/உச்சி என்பதால் அங்கு தெளிவு அதிகம்! மேலிருந்து அழகு தெளிவாகத் தெரியும் = அதான் முருகு (அ) அழகு! = முருகன்!
* காடு அடர்த்தி என்பதால் அங்கு மயக்கம் அதிகம்! காட்டின் வளம் துய்க்க, அந்த மயக்கத்தில் இறங்கினால் தான் உண்டு! அதான் மால் = திருமால்!

இப்படி நிலமும், குணமுமே = இயற்கையே பண்டைத் தமிழ்க் கடவுள்கள் ஆயின!
மாயோன் மேயக் காடுறை உலகும்
சேயோன் மேய மைவரை உலகும் - என்பது ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியர்!

இப்படிப் பலரையும் மயங்கச் செய்வதால் = மால்!
என் முருகன் தெளிவு குடுப்பான்! இவரு மயங்கச் செய்வாரு:))

இந்த "மயக்கம்" என்பதால்...மால், பல மயக்கங்களைக் குறிக்கத் துவங்கின இலக்கியத்தில்!
* காதல்/காமம் = மால்
* கருமை = மால்
* மாலைப் பொழுது = மால் (மயக்கும் "மாலை"ப் பொழுதே நீ போபோ பாட்டு ஞாபகம் வருதா?:)
* சூடும் மாலை = மால்
* பெருமை = மால் (சின மால் விடைச் சிவன் - மாணிக்கவாசகர்)

மாலுக்கு இளையவள் = மாலினி/ கொற்றவை!
துளசிக்கு = மால்முருகு என்ற பேரும் உண்டு!

மலையும் காடும் ஒன்னோட ஒன்னு சேர்ந்தே இருக்கும்! காடில்லாத மலை இல்லை! மலை இல்லாத காடில்லை!
அதான் முல்லையும் குறிஞ்சியும் = மாலும் முருகும் = சங்கத் தமிழ்!

ஒரு பெண்ணுக்கு என்ன தான் கணவன் மீது கொள்ளை ஆசை-ன்னாலும், அப்பா மேல எப்பமே ஒரு பெருமிதம்!
அது போலத் தான் நானு! முருகன் மீது கொள்ளை ஆசை-ன்னாலும், எந்தை மாலவன் மீது எப்பமே ஒரு மதிப்பு - அப்பா-ன்னு போய் நின்னு அவரு கிட்ட அழ முடியும்! = மாலே மணி வண்ணா!

நாளை பேசப் போவது = யாருமில்லாமையால் யாரோ @kryes ஆம்:) subject to last minute changes:)

கோதைத்தமிழ்27: கூடாரை வெல்லும்!

$
0
0
இன்று பேச வேண்டியது ஒரு பிரபல எழுத்தாளர்! அவரின் நேரமின்மையால், ஒலித் துண்டு இல்லாத ஒரு பதிவு இது! Konjam Adjust Maadi:)

இந்த 27ஆம் நாளுக்கு கூடாரவல்லி என்று பெயர்!
பல வீடுகளிலும் இந்தக் காட்சி உண்டு! எங்கள் வீட்டுக் காட்சி இதோ....அம்மா காலையில் செஞ்ச சர்க்கரைப் பொங்கல்:)

ஆனா நான் தான் ரொம்பச் சாப்பிட முடியாம, என்னமோ யோசனையாவே இருக்கேன்!
ஒரு குரலைக் கேட்டா, அது இந்தப் பொங்கலை விட இனிப்பா இருக்கும்! நேற்று சில நொடிகளே கேட்டேன்!

இந்தப் பொங்கலுக்கு, ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிட்டேன்! அம்மா ஒரு மாதிரியாப் பார்த்தாங்க:))



இதோ, பாவை நோன்பு முடியப் போகுது! தன் தோழிகளுக்கெல்லாம் கண்ணனிடம் சொல்லி, பரிசு வாங்கிக் கொடுக்குறா கோதை!
ஆண்டாள் ஒரு மிகச் சிறந்த பெண் மேலாளர்! Team Player!

* பாசுரங்கள் 1-5 = நோன்பின் விதிகளைச் சொன்னாள்! Vision Statement! Specifications! அதைக் கொடுத்தாத் தானே நாமும் தெளிவாக வேலை பாக்க முடியுது! Spec இல்லீன்னா எம்புட்டு குழம்ப வேண்டி இருக்கும்?
* பாசுரங்கள் 6-15 = நோன்பு துவக்கம்! அத்தனை பேரையும் வீடு வீடாகப் போய் எழுப்பி, தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்! Human Resource = Mobilization, Optimization & Motivation!

* பாசுரங்கள் 16-25 = கண்ணன் வீட்டில் Project நடக்குது! வாயிற் காப்போன், நந்த கோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை-ன்னு மொத்த Team இருக்கு!
* பாசுரம் 26 (நேற்றைய பாசுரம்) = Project Delivery! கருவிகள் எல்லாம் கேட்டு வாங்கி, டெஸ்டிங் எல்லாம் முடிச்சி.....

* பாசுரம் 27 (இன்றைய பாசுரம்) = Success! அதனால் PROJECT PARTY! :) - பாற் சோறு, மூட நெய் பெய்து...முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோ....




* நோன்பு ஆரம்பிக்கும் போது நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பாற் சோறு, மூட நெய் பெய்து"...
* நோன்பு ஆரம்பிக்கும் போது மையிட்டு எழுதோம், மலரிட்டு முடியோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பல்கலனும் யாம் அணிவோம்"...


இப்போ நோன்பு முடிகிறது அல்லவா?
அதனால், நன்றாக அலங்காரங்கள் செய்து கொண்டு, மையிட்டு, மலர் இட்டுக் கொள்கிறார்கள்!
அவன் அலங்காரத்துக்கு ஒப்பாக, அவன் கண்ணுக்கு இனிமையாக, கண்ணனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்!

பாற் சோறும், பொங்கலும் பொங்கிப் பொங்கி, உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிப் பொங்கி...இதோ...அந்த இனிப்பான பாசுரம்!

கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு, யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே!


பாடகமே என்று அனைய, பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற் சோறு!
மூட நெய் பெய்து, முழங்கை வழி வாரக்,
கூடி இருந்து குளிர்ந்து! ஏல்-ஓர் எம்பாவாய்!


மேலோட்டமான பொருள்:தன்னோடு கூடாதவர்களையும் வெல்லும் கோவிந்தனே, உன்னைப் பாடி நோன்பிருந்து நாங்கள் பெற்ற இன்பம்!

சூடகம் = கைவளை(Bracelet)! தோள்வளை=வங்கி! தோடு=பெண்கள் காதணி! செவிப்பூ=காது மடலில் குத்திக் கொள்ளும் பூ! பாடகம்=கால் வளை

இப்படிப் பல அணிகள் அணிந்து, ஆடை உடுத்தி, தண்ணீரில் பொங்காமல் பாலில் பொங்கிய சோற்றில் நெய் பெய்து, முழங்கையில் நெய் வழியுமாறு, மகிழ்வுடன் உண்போம்! கூடி இருந்து உண்போம்! கூடி இருந்து குளிர்வோம்!


இன்றைய எழிலான சொல் = கூடார்!
அது என்ன கூடார்? எதிரி-ன்னு சொன்னா என்ன?

கூடுதல் = ஒன்றுபடுதல்! கூடார் = ஒன்றுபடாதார்!
கருத்தோடு ஒன்றுபடுதலா? இல்லை அதற்காக ஊரே ரெண்டு படுதலா?:)

கருத்து வேற! மனிதம் வேற!
ஒருவர் கொண்ட கருத்துக்காக, அவர் மேல் வன்மம் வளர்த்துக்கக் கூடாது!
சில சமயம், இந்த வன்மம் மனசுக்குள்ள போய் உட்கார்ந்துகிடும்! சமயம் கிடைக்கும் போது எழுந்து தாண்டவம் ஆடும்!:) அது அறம் அன்று! தமிழ்ப் பண்பும் அன்று!

கூடுமானவரை, அப்படி வன்மம் தரும் சொற்களைத் தவிர்ப்பது நன்று!
எதிரி, பகைவன் ன்னு சொல்லும் போது, ஒரு வெறுப்புத் தன்மை தெரிகிறது! இதெல்லாம் மன்னர்களுக்கு/ நாடுகளுக்கு பொருந்தும்!
நம்ம வாழ்வில் பகைவர்/எதிரி-ன்னு எல்லாம் சொல்லாம, மாற்றார்/கூடார்-ன்னு மென்மையாகவே ஒலிக்கலாம்! என்ன சொல்றீங்க?:)

ஆண்டாளும் அப்படியே ஒலிக்கிறா!
* கூடாரை வெல்லும் = கூடார் = நம்மோடு கூடாதவர்கள்
* மாற்றார் உனக்கு வலி தொலைந்து = மாற்றார் = மாற்று நிலை எடுப்பவர்கள்
இப்படி மென்சொற்களே சரி!

நாளைப் பேசப் போவது, பெயர் குறிப்பிட முடியாத ஒரு பெண் ட்வீட்டர்!:) வர்ட்டா?:)

கோதைத்தமிழ்28: ஓம் என்றால் என்ன? @FamousLadyTwitter

$
0
0
மக்கா வணக்கம்! இன்னிக்கி பேசப் போவது பிரபல பெண் ட்வீட்டர்! ஆனாப் பேரைச் சொல்லக் கூடாது-ன்னு எனக்கு உத்தரவு!:)

விடிய விடியக் கதை கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா-ன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா சின்னம்மா-ன்னு சொல்லலாமா? உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன்:))

ஆனா கடினமான Clue குடுக்கலாமாம்! என்னத்த குடுக்க?

* இவிங்க நல்லவுக, வல்லவுக, சேவல் பண்ணைச் சண்டை போடுபவக!
* துரைமாருங்க புத்தகமாவே படிச்சி, Status Update கீச்சிக் கீச்சியே பிரபலமானவங்க!
* கண்ணாலப் பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுவது போல் சீன் போட்டு, காதல் தூரம் ஓடுபவக....:))
* அப்பாவிகளான என்னையும், @4sn செ.வையும் அடிக்கடி வம்பு பண்ணுபவுக

Any More Difficult Clues??:) கண்டு புடிச்சாச்சா?:)))
அம்மிணி பேசுவதைக் கேளுங்க!
பாசுரத்தின் முதல் வரிக்கு மட்டுமே இத்தனை நுட்ப நுண்ணிய விளக்கம்! மத்த எல்லா வரிக்கும் குடுக்க ஆரம்பிச்சா?

28-thirupaavai-FamousLadyTwitter

நன்றி அம்மிணி!:) எங்க கிராமத்தின் சாயலை அப்படியே அணுகிப் பேசியமைக்கு!
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்! பொங்கலுக்கு கிராமத்துக்கு போனது போல் ஒரு Effect இப்பவே கிடைச்சிருச்சி!:)



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,


உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:கறவை மாடுகளுக்குப் பின்னாலேயே சென்று, காட்டை அடைந்து, அனைவரும் சேர்ந்து உண்போம்!
இப்படி, மாட்டை நாங்கள் முன் நடத்திச் செல்லாமல், மாடு எங்களைப் பின் நடத்திச் செல்கிறது! இப்படியான அறிவில்லா ஆயர் குடி!

அதில் நீ வந்து தோன்றினாயே கண்ணா! என்ன புண்ணியஞ் செய்தோமோ? குறை ஒன்னுமே சொல்ல முடியாத கோவிந்தனே!
நீ - உறவு - நான்! = இதை யாராலும் ஒழிக்க முடியாது! ஒழித்தாலும் ஒழிக்க ஒழிக்க ஒழுகும்! நம் உறவு என்னைக்கும் இருக்கும்!

ஏதோ ஆயர் குடிப் பசங்க, அறிவில்லாமப் பேசினா, அதையெல்லாம் மனசுல வச்சிக்காதேடா! நீயே எங்களுக்கு எல்லாமும்! நீயே பறை தருவாய்! எங்களை ஏற்றுக் கொள் பெருமானே!



இன்றைய எழிலான சொல் = உன் தன்னோடு-உறவேல்-நமக்கு!

என்னடா இவ்ளோ பெரிய சொல்லா?-ன்னு பாக்குறீங்களா? - இது தமிழ் மந்திரச் சொல்! ஓங்காரத்தைக் குறிப்பது!

ஓம் என்பது வடமொழி அல்ல! அது ஒரு ஒலிக் குறிப்பு மட்டுமே!
அது பல மொழிகளிலும் இருக்கு, சமணம், சீக்கியம் போன்ற சமயங்களிலும் இருக்கு! அதை, கோதை தமிழில் காட்டுகிறாள்!

முன்பு அப்பாவுக்குப் பாடஞ் சொன்ன என் முருகன், என்ன சொன்னான்? = யாரும் சொல்ல மாட்டாங்க!:)
பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான்-ன்னு சொல்லுவாங்களே தவிர, அது என்ன பொருள்-ன்னு மூச்சு விட மாட்டாங்க!
ஏன்னா ரகசியமாம்! வேதம் படிக்கறவா மட்டும் தான் தெரிஞ்சுக்கணுமாம்!:)

ஆனா, கோதையிடம் இந்தச் சட்ட திட்டம் எல்லாம் வேலைக்காவாது!
எல்லாரும் அவனை அடைய வேணும்-ன்னு நினைப்பவள்!
தான் நரகம் புகினும், மற்ற அனைவரும் திருநாடு புகுவார் அல்லவா என்று பின்னாளில், ஒருவரை, இதுவே கோபுரம் ஏறிப் பேச வைத்தது!

ஓம் = அ + உ + ம்
* அ = 'அ'வன்
* ம் = நா'ம்'
* உ = 'உ'றவு

அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னைக்கும் இருக்கு! அதை அவனே நினைச்சாலும் ஒழிக்க முடியாது! = அதான் ஓம்!
வேதங்கள்/ தமிழ் மறைகளின் உயிர் நாடி = ஓங்காரம்! மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி...என்பர்!

* அம்மா மேல புள்ளைக்கு ஆத்திரம், நீயெல்லாம் அம்மாவா?-ன்னு புதுப் பொண்டாட்டி பேச்சில் மயங்கி அவளை மறுதலிக்கலாம்!
* புள்ளை மேல் அம்மாவுக்கு கோவம்! உன்னைப் போய் பெத்தேனே-ன்னு அழுவலாம்! ஆனா அம்மா-பிள்ளை உறவு? அதை அழிக்க முடியுமா?

அவ தொடர்பையே அறுக்கணும்-ன்னு, அவன் போய், ஆயிரங் கோடி செலவழிச்சாலும், தன்னோட DNAவை மாத்திக்க முடியுமா?:)

* எப்படி DNA-வை மாத்த முடியாதோ, அப்படி ஓங்காரத்தை மாத்த முடியாது!இறைவனாலும் முடியாத ஒரு செயல்-ன்னா, இது ஒன்னு தான்!
நமக்கும் அவனுக்குமான உறவை, அவனே நினைச்சாலும் அழிக்க முடியாது! ஒழிக்க ஒழியாது என்கிறாள் கோதை!

இதுவே முருகன் சொன்ன ஓங்காரப் பொருள்!
மத்த விளக்கமெல்லாம் சும்மா தத்துவம்! அ-உ-ம=பிரம்மா-விஷ்ணு-சிவன், மேல்பாகம்-வயிறு-அடிப்பாகம், குண்டலினி ன்னு எல்லாம் ஏதோ சொல்லுவாய்ங்க!
Juz Forget It! Those are Latter Day Hypes for Om!
ரொம்ப தத்துவமெல்லாம் இல்லாம, இறைவனிடம் நம் உறவை முன் வைப்பதே ஓம்! = தமிழ்ப் பொருள்!

ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம் 
= உன்தன்னோடு + உறவேல் + நமக்கு!

நாளை முத்தாய்ப்பாக நான் முடிக்கிறேன்!
30ஆம் பாசுரத்தை, நற்றமிழ் அறிஞர், இராம.கி. ஐயாவின் உரையோடு, இந்த #TamilTwittersPodcast என்னும் தமிழ்த் தேர், அசைந்து நிலைக்கு வரும்!

கோதைத்தமிழ்29: What Time is சிற்றஞ்சிறுகாலே? @kryes

$
0
0
வணக்கம் மக்கா!
இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிறைவுறப் போகிறது.....நிலைக்கு வரப் போகிறது.....நாளை க்கு.....தைப்பொங்கல் நாளிலே!
அதுக்கு முன்னால, சின்னதா ஒரு warm down exercise:) யாரு பேசுறா இன்னிக்கி? நீங்களே கேளுங்க!:)

29-thirupaavai-kryes


சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!


இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:சிற்றஞ் சிறு காலையில் வந்து உன்னைச் சேவித்தோம்! உன் திருவடிகளையே பாடுகிறோம்! ஏன் தெரியுமா?

மாடு மேய்த்து உண்ணும் குடியில் பிறந்தோம் நாம் இருவரும்! என்னை நீ உன்னுடன் ஏற்றுக்கொள்! மாட்டேன்-ன்னு சொல்லக் கூடாது! மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேணும்!

ஏதோ நோன்பு-பறை ன்னு சடங்காச் செஞ்சோம்-ன்னு நினைச்சிக்காதே கண்ணா! எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நீ தான்! உனக்கு நான்-எனக்கு நீ!

இதைத் தவிர வேற எதுவும் எனக்கு வேணாம்!
அப்படியே வேற ஆசை எனக்கு வந்தாலும் அதை மாத்திருடா! அந்த ஆசையெல்லாம் எனக்கு வேணாம்! எனக்கு நீ தான்டா எல்லாம்!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சிற்றஞ் சிறுகாலே!

காலை, சிறுகாலை, சிற்றஞ் சிறுகாலை
Morning, Dawn, PreDawn!

* காலத்தின் துவக்கம் = காலை (Morning)
* காலை-மாலை என ஒரு நாளை இரண்டாகப் பகுப்பதால் = பகல் (Noon)
* ஒவ்வொரு நிமிடமாகப் போவதால் = போது/ பொழுது

இப்படி, தமிழில் காலங்களின் பெயர்களும் காரணப் பெயர்களே!
காலை என்பது காலத்தின் துவக்கம்!
அது விடியலுக்கு முன்-பின் என இரண்டு வகைப்படும்!

சிறுகாலை, வைகறை, விடியல் என பல பெயர்கள் உண்டு! சிற்றஞ் சிறுகாலை = வைகறைக்கும் முன்னே!
நாளை, ஆறாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு மணி நேரங்கள் என்பது தமிழ்க் காலக் கணக்கு!

* வைகறை 2:00 am - 6:00 am
* காலை 6:00 am - 10:00 am
* பகல் 10:00 am - 2:00 pm
(முற்பகல் - நண்பகல் - பிற்பகல்)
* எற்பாடு 2:00 pm - 6:00 pm
* மாலை 6:00 pm - 10:00 pm
* யாமம் 10:00 pm - 2:00 am

வள்ளுவரும், ஒரே குறளில், காலங்களைத் தொட்டுச் செல்வார்!
காலை அரும்பி, பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் - (காமத்துப் பால்)

காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி விடுகிறதாம்!
வைகறைத் துயில் எழு-ன்னு கூற்றுப்படி, வைகறையில் எழுந்திரிச்சிக்க முடியல! ஒரே கனவு!

* அதனால் விடியலில் பூக்க வேண்டிய பூ, காலையில் தான் அரும்பே விடுதாம்! = காலை அரும்பி
* பகல் முழுக்க, விரியலாமா வேணாமா-ன்னு குழம்பிக் குழம்பி...விரியத் தயாரா இருக்கு, ஆனா விரியல = பகலெல்லாம் போதாகி
* மாலையில், பறவைகள் தத்தம் துணையோடு சேர, கூட்டுக்குத் திரும்பும் வேளையில், அதைக் கண்டு ஏங்கி, பட்டு-ன்னு விரியுது = மாலை மலரும் இந்நோய்

இப்படிக் காதலால் காலமே மாறுது-ன்னு, காலம்+காதலை ஒரு சேரக் காட்டும் அழகுத் தமிழ்க் கவிதை!

நாளை நற்றமிழ் அறிஞர் இராம.கி ஐயாவின் உரையோடு, தைத்தமிழ் நன்னாளில், இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிலைக்கு வரும்!

கோதைத்தமிழ்30: தமிழில் 12 வித மாலை @raama.ki.ayya

$
0
0
மக்களே வணக்கம்!
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!



கடந்த ஒரு மாதமாய், ஆடி ஆடி, அசைந்து அசைந்து...
துண்டெழுத்து வீதியான ட்விட்டரில்...
சிறப்புடன் வலம் வந்த தமிழ்த் தேர்...
இதோ நிலைக்கு வந்து விட்டது!

* நற்றமிழ் அறிஞர், நுட்பியல் பொறியாளர்,
* SPIC நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர்...
* துறை சார் தமிழ் - அறிவியல் தமிழ் - சங்கத் தமிழ் என முழு வட்டம் சுழல் வல்லார்...
* இணையத் தமிழில் இணையிலா ஈடுபாடு காட்டுபவர்...
* பலரையும் தமிழ்ப் பெருமிதம் கொள்ளச் செய்பவர்...

ஆசான் இராம.கி ஐயா-வின் நிறைவு நாள் உரை!
கீச்சர்களின் தமிழ்த் தேருக்கு அணிகலன்! இதோ!
(குறிப்பு: ஐயாவின் பணி நிமித்தங்களால், அவர் எழுத்து உரையை வாசிப்பது, என் தந்தை மு. கண்ணபிரான் அவர்கள்)

30-thirupaavai-raamakiayya

நன்றி ஐயா!
உரை சால் உரையுடன், கீச்சர்களின் இந்தத் தமிழ் விழா நிறைந்தது மட்டிலா மகிழ்ச்சி!



பாசுரம்:
வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,


சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!

தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்,
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!


உய்யவும் ஆங்கொலோ? என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல்-உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!




இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = தெரியல் (டரியல் அல்ல:)))))

தெரியல் = மாலை!
பல விதக் கதம்பமான மலர்களால், 'தெரிந்தெடு'த்துக் கட்டியதால் = தெரியல்!

தமிழ் மாலைகள் பல உண்டு!
* தொங்கல் = இரு புறமும் தொங்கும் மாலை
* தெரியல் = பல வண்ணப் பூவால் 'தெரிந்தெடு'த்துக் கட்டிய மாலை

* கண்ணி = ரெண்டு ரெண்டு பூவாய்த் தொடுத்த மாலை
* கோதை = கொண்டை/கழுத்தில் நெருக்கமாய்ச் சூடும் மாலை
* கோவை = ஊசியால் கோர்த்த மாலை

* தார் = வாழைத்தாரில் பூக்கள் சொருகிய மாலை (பெரும் அலங்காரத்துக்கு)
* படலை = பச்சை இலைகள+பூக்களால் தொடுத்த மாலை

* அலங்கல் = சரிகை/துணி சுற்றிய மாலை
* பிணையல் = பின்னல் போல் முறுக்கிக் கட்டிய மாலை

* சிகழிகை = தலை மாலை
* சூட்டு = நெற்றி மாலை
* ஆரம் = கழுத்து மாலை

இப்படி பலப்பல மாலையாய் மணக்கும் தமிழ் = நம் கோதைத் தமிழ்!


இந்தத் தமிழ்த் தேரினை இழுத்துக் குடுத்த ட்வீட்டர்கள் அனைவருக்கும் இனிய நன்றி! பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் பரவிய நன்றி!

நன்றி மட்டும் சொன்னால் போதுமா? கீச்சர்-ன்னா சும்மாவா?
இதோ அவள் நினைவாக, அவள் சூடிக் கொடுத்த மாலையும், பாடிப் பேசிய கிளியும்...உங்கள் பரிசாக...பரிசேலோ ரெம்பாவாய்!

எழுத்தாளர் சொக்கனும் & நானும் தோழன் ராகவனும் மட்டுமே பேசுவதாய் இருந்த பாசுரங்களை.....

இந்த மாதம் முழுதும்.....அனைத்து ட்வீட்டர்களும்.....அவரவர் இயல்பில் பேசிக் குடுத்து.....
ஒரு அழகிய தமிழ்ச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ்க் கீச்சர்களுக்கு என் பல்கால் நன்றி!

* அனைத்து ட்வீட்டர்களின் குரல்கள் இங்கே
= http://soundcloud.com/kryes/sets/tamiltwitter-paavaipodcast

ட்வீட்டர்களின் குரல், இது போலவே, தமிழுக்கும் மனிதநேயத்துக்கும் என்றும் ஒலிக்கட்டும்! வர்ட்டா?:)

தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!

$
0
0
(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan.org-இல், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan கேட்க...அதற்கான பதிவு இது!

Murugan.org -இல் இன்று பதிப்பித்து உள்ளார்கள்! அதன் சுட்டி இதோ


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
...இப்படி பல விழாக்கள்!
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

இந்த வேல் வாங்கிய நாளிலே, "வேல்" என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!


1. வேல் - பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் - தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

3. வேலின் அமைப்பு:

வேல் எப்படி இருக்கும்?
அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!
ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்! - "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல்- இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!



4. வேலின் தோற்றம்!

வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)
எறிந்தால், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லக்கூடிய பளுவில் தான் வேல் செய்யப்படும்!
* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்!
ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும்! ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே!
சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

5. வேலும் ஈட்டியும் ஒன்றா?

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!
வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

6. வேலின் சிறப்புப் பெயர்கள்:
கூர் வேல், நெடு வேல், சுடர் வேல், வீர வேல், வெற்றி வேல்...ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை
- இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா!

வேல் வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
-ன்னு அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே
(ஐங்குறுநூறு, கபிலர்)

* அதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து, அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!
வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறியில் ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கிலே துடிச்சிப் போய் நான் வாழுறேன்!
இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
மடவை முருகா (மடப்பயலே முருகா)...நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"
-ன்னு...இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி....

இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!

அவன் வேடத்தில் அவள்!
முருகன் வேடத்தில், வேலொடு வள்ளி!

இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது என்று அறிந்தோம்!
இன்றும், தமிழ்க் குடியினர்/கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

சிலப்பதிகாரத்தில் வேல்:
பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொன்னாலும், அதை ஈடுகட்டவோ என்னவோ....
சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக அழகாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
-ன்னு முருக பக்தரான நக்கீரரே, இரண்டு அடிகள் மட்டுமே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?
- என்று வேல் விருத்தத்தை, அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே!
-ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, நம்ம அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
....

இணை இன்றி, தான் உடையான் - ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் - திருக் கை வேல் அன்றே!
-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்!

வேல் பற்றிய பக்தி-இலக்கிய நூல்கள்:

பின்னாளில், வேல் பற்றிய பல பக்தி-இலக்கிய நூல்கள் வந்துள்ளன!
* இதற்கு முக்கிய காரணம் = அருணகிரி!
தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி செய்த முயற்சிகள் சொல்லில் அடங்கா!

ஆலயங்களில், வடமொழி அதிகம் புழங்கத் துவங்கி விட்ட காலத்தில், வடமொழியைப் பகைத்துக் கொள்ள விரும்பாது,
அதனொடு கூடவே சென்று, சிறுகச் சிறுகத் தமிழை நுழைக்க, அவர் செய்த முயற்சிகள் பலப்பல!

இதற்கு, அவருக்கு முக்கிய ஊக்க சக்தி = இன்னொரு தமிழ்த் தெய்வமான திருமாலின் ஆலயங்களில், சில நூற்றாண்டுக்கு முன்பு தான், தமிழ் பரவலாகத் தழைக்கத் தொடங்கியிருந்த புரட்சியைக் கண்டார்!

வேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளில் ஓதுதல்!உற்சவங்களில் வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆழ்வார்களின் தமிழை முன்னே ஓதிச் செல்ல....
இறைவனே தமிழின் பின்னால் வரும் காட்சிகளைக் கண்ட அருணகிரி, அதிலே மனம் பறிகொடுத்து, திருமால் "வண்டமிழ் பயில்வார் பின்னே திரிகின்றவன்"-ன்னு பாடினார்! இதே நிலை முருகன் ஆலயங்களிலும் வர வேண்டி, அவர் செய்த ஆரம்ப வேலைகள் பலப்பல!

அதில் ஒன்று தான், வேல் வழிபாடு!
* வேல் வகுப்பு
* வேல் விருத்தம்
= இவை வேல் வழிபாட்டை முன்னிறுத்த அருணகிரியார் செய்த பனுவல்கள்!
தனித்து வழி நடக்கும் என 
திடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணை அதாகும் 


திருத்தணியில் உதித்தருளும் 
ஒருத்தன்மலை விருத்தன் என 
உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே !!
(- வேல் வகுப்பு, அருணகிரிநாதர்)

அந்த வழியில் பின்னர் பாம்பன் சுவாமிகளும், வள்ளிமலை சுவாமிகளும், "வேல் மாறல்", "வேற் பதிகம்" போன்ற பனுவல்களை, வேலின் மீது செய்துள்ளனர்!

பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்!
பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!!


சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கூறுவர்!

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு!பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா....பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்....நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!
என்னவனைப் போலவே, உயரமும் - நெடிதும் - அழகும் - அறிவுமான = வேல்!
தழுவ இனியது வேல்!
அவனைத் தழுவும் போது நழுவினால், போடா-ன்னு அவன் அந்தரங்க வேலைத் தழுவிக் கொள்வதில், இன்னும் சுகம்!:)

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து.....முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என "வேல்" தோன்றும்...முருகா என்று ஓதுவார் முன்!

உசாத் துணை (References):

1. தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
2. முருகன் (அ) அழகு - திரு.வி.க
3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை (கழக வெளியீடு)
4. சிலப்பதிகாரம் - நாவலர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்
5. வேல் விருத்தம், வேல் வகுப்பு - அருணகிரிநாதர் (kaumaram.com) & Reforms of Arunagiri - Pongi Publications, Vallimalai
6. Tamil Traditions on Murugan - Dr.Kamil Zvelebil

இயேசுநாதர் &நம்மாழ்வார் - ஏலி ஏலி லாமா சபக்தானி?

$
0
0
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!

* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!

என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று.....
நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?

(பிரேசில் சென்ற போது கண்ட Jesus Christ - Redemeer on the Mount)
(அவர் அழகே அழகு!)


பள்ளிக் காலத்திலே.....என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnarajஅவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!

என்னை முதல்வெள்ளிப் பூசையில் (First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார்? என்றும் அவரிடம் அப்பவே விவாதம்:) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை:)

சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்...
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன், வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!


மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,

29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,

30. அவர் மேல் துப்பி...

40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.

46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்என்று அர்த்தமாம்.


மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)


9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.

கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!


என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!

* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகேயன் (Kurugoor, a town in Nellai)

இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!

இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்! = மக்களிடையே கலந்து போதித்தார்!
அதனால் "மேலாதிக்க" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி நேரடியாக இறங்காததால் தப்பித்தார் போலும்:)

* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)


இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"

* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
எய்தற்கு அரிய மறைகளை,ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபன்!

* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!

ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?

* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை!
இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!

* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!

** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதித் தான் ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))

** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரை......சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((


சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?



* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப் பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பது = திருவாய்மொழி!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

மலைப்பொழிவிலும், திருவாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!

பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம,
புரியும் படி பத்தி பிரித்து,
அதே வண்ணத்தில் கொடுத்திருக்கேன்!
பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க:)

மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!

மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம்வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில்இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1- உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....

மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்;பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன்,எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------

மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறதுஎன்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! =* ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!



பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!

கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?

ஹா ஹா ஹா! அப்படியில்லை! அன்பு அதீதமாக மிகுந்துவிடும் போது, அவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், அவள், என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!

இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, இவர்கள் என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"


நம்மாழ்வாரும் அப்படியே!
"முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!

உம்பர் அந்தண் பாழேயோ? அதனுள் மிசை நீயேயோ?
எம்பரம் சாதிக்கல் உற்று, என்னைப் போர விட்டிட்டாயே??
தீர இரும்பு உண்ட நீர் - அது போல எந்தன் ஆருயிரை
ஆரப் பருக, எனக்கு என்றும் ஆரா அமுது ஆனாயே!!!

நல்லாச் சுடச் சுடக் காய்ச்சிய இரும்பு; தகதக-ன்னு மின்னுது! அந்த இரும்பு தண்ணி குடிச்சா எப்படி இருக்கும்?:) = இரும்பு உண்ட நீர்!
உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போலஎன் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!

என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)


எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"

எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural?
இதுல என்னமோ இருக்கு டோய்!
Bridal Mysticism (அ) நாயகி பாவம் என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் - நண்பர்கள் உட்பட :))

ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு!
ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......

இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!

$
0
0
(updated....)
Crux of the Post:
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகத் "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!


Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...
* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!
This is NOT claimed as vaLLuvar's exact birthday etc etc; Itz only a "notation" for tamizh related standards; For General life = Common Era (CE) applies for all, world over!


You can still celebrate ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc & do poojas at home!
But pl DONT brand it as a "Tamizh" Year!
You are free to call it Hindu Year, Nandana or whatever! Dot!


.....Now, the full post, with literary evidences & some logical reasoning


பந்தல் வாசகர்களுக்கு இனிய (தமிழ்???) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு?
போய்ப் பார்த்தா........."தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே!:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)))
--------------------------------

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா? ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன!
தமிழக அரசியலில் அரசாணைகளும் மாறி விட்டன!:)

ஆனா, இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி! "சித்திரையில் நித்திரை" -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:))
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு இரண்டு புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:)
கழகத் தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சி வரும்படியை நிறுத்தி விடுவாங்களா என்ன?:)
தமிழ்....பாவம்! = இவங்க போதைக்கு, ஊறுகாயாகப் போய்விட்டது:(

(updated - Apr14): இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது-ன்னு சிலர் நினைத்துக் கொண்டு அதற்காகவே எதிர்க்கிறார்கள்!:)
ஆனால்,  கருணாநிதிக்கும் முன்னமேயே, ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்தில், இது நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல், இச்சட்டமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ? என்னமோ?:)))
எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!
(end of update)

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு பாக்குறீங்களா?
உண்மை அறியும் ஆவல் உள்ளோர்...அரசியலை ஒதுக்கி விட்டு....சற்று, உன்னிப்பா நோக்குங்க:

* தை என்பவர்கள் = பெரும்பாலும் தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மதம் சார்ந்த மடாதிபதிகள் - சமய வழி வந்தவர்கள்!

ஆக, இரண்டு கட்சிகள்!
இதில் எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும், சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று பல பேச்சுக்கள்!

ஆனால்....
தமிழ் இலக்கியம் = காலத்தின் கண்ணாடி!
அது "புத்தாண்டு" பற்றி என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால் என்ன? = அதுவே இந்தக் கட்டுரை!


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

எந்தச் சார்பு நிலையிலும் நிற்காது, தமிழைத் தமிழாக அணுகும் முயற்சியே மனத்துக்குப் பிடித்தமானது!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை!
கொள்கை விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்! ஆனால் அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! பொதுவான இலக்கியத்தில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" கதை தனி:))

நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!

சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!
ஆனால்.....நம் விருப்பத்துக்கு மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தமிழின் தொன்மத்தில், நம் சுய விருப்பு வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?"என்று வந்த பதிவுகளும், இதையொட்டியே!)

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

இந்த முன்னோட்டம் - கண்ணோட்டத்தோடு, கட்டுரையைத் துவங்கலாமா?
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?


முன்குறிப்பு (அ) முன்னெச்சரிக்கை:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடி......வள்ளுவர் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!
யார் யார்? = மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க,
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!

ஆனால், அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? என்பது இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதிச் செய்தியறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் கி.மு. 31= எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா?ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!

(updated) ஆனால், பின்னாளில்...மறைமலை அடிகளின் மாணவருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் - வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு...
தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் எனவும் வகுத்து அளித்தார்! அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்...அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவுகள் (ஆதாரம்): 
* பச்சையப்பன் கல்லூரிக் கூட்ட முடிவு: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் = http://muelangovan.blogspot.com/2012/04/blog-post_14.html
* நாவலர் சோமசுந்தர பாரதியார் -தை-02 குறிப்பு =http://www.vallamai.com/literature/articles/19155/
(end of update)

முது பெரும் தமிழ் அறிஞர்கள் = அவர்களை மதித்து, அவர்கள் வழியிலேயே சென்று, இலக்கிய ஆய்வு செய்வது நல்லது தானே? அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
---------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள்

அவற்றுக்கு ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோர்த்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி என்னும் பின்னாள் ’கலைக்களஞ்சியமும்’ அதையே சொல்கிறது!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்!
= டேய், அது தமிழா???:))

(ஆமாம்....தமிழ் தான்! ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் எப்பவோ தமிழ் ஆயிருச்சி-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு!:))) அது பற்றி இங்கு பேச்சில்லை!:)

நினைவில் வையுங்கள்:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! they are just "add-ons"
=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! = அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> அதே போல்: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! = அவை இந்து ஆண்டுகள்!

Hindu Calendar! or Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years"
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! அதை மொழி அமைப்பில் புகுத்தித் திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவ - விபவ ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் கொண்டு போய் மாத்தி வைக்கணும்? ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்பட்டு இருக்கிறார்கள்!:))

இவர்களின் வாதம் = வானியல்/ சோதிடம் அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன் மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை = எனவே அதுவே புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்!
ஆனால் மேஷம் புகுவதே = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)
ஒரு பண்பாட்டின் ஆண்டுப்பிறப்பு = சோதிட அடிப்படையில் தான் இருக்கணும் -ங்கிறதுக்கு என்ன விதி? Any Proof of Evidence?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)!
ஒரு ஆண்டு "வசந்தத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு இவங்களாச் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க!:))
ஆனா அந்த "மரபு"க்கு தரவு? ஆதாரம்??


சரி, இதெல்லாம் வேண்டாம்! நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை  
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!
பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே", முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே! இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கவில்லை!

ஆனால் இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் - உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் - கார்காலமே ஆண்டுத் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!
(உரை: ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக(ஆவணி), தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யா(ஆ)ண்டாம்)
-----------------------

2. சங்க காலம் - எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!
தைந்நீராடல் = முது பெரும் தமிழ் மரபு!
ஆனால் அதான் ஆண்டின் துவக்கம் ன்னு சொல்கின்றனவா? = இல்லை!

நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இவ்வளவு அதிகமாக இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனால், தை = ஆண்டின் துவக்கம், என்று எங்கும் நேரடியாகச் சொல்லப்படவில்லை!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து -ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னால் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாதம்! அவ்வளவே!
-----------------------

3. அடுத்து...ஜெ-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் சில "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:
"ஆடு தலை" = நக்கீரர் எழுதியநெடுநல்வாடை!

ஆடு தலை-ன்னா, ஏதோ ஆட்டுக் கறியில் உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:))) தலை = முதல்! (தலையாய = முதன்மையான)
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா

ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு! எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:))
Wait....Wait.....

மேஷம் தான் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகையிலும், ராசி பலன்-ல ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!

இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு........ :) பாவம் அவரு!
கயிலை பாதி-காளஹஸ்தி பாதி, திருவிளையாடற் புராணம்-புருடாணம் ன்னு ஒரு சங்கப் புலவனின் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :))

சித்திரை = இதர "ஆதார"ங்களாகச் சொல்லப்படுபவை:

* சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!
ஆனா காமவேள் விழா/ காதல் விழா என்று தான் பேசுகிறதே தவிர....
அதைப் "புத்தாண்டு"-ன்னும் சொல்லலை! ஆண்டின் முதல் மாதம்-ன்னும் சொல்லலை!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு சிலப்பதிகார வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்க -ங்கிறத்துக்கு, சிலம்பின் வரிகள் ஒன்னும் சகஸ்ரநாம வரிகள் அல்ல:)

* பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, பிற்காலச் சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!
இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் காமெடிகளுக்குப் பஞ்சமே இல்ல:) 23ஆம் புலிகேசி வெட்டிய கல்வெட்டு கணக்கா...ஆளாளுக்கு கல்வெட்டு-ங்கிறாங்க!:)
நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும் விவாதத்துக்கு உட்பட்டு!

கல்வெட்டில் இருந்தாலும்.....அவை = "பிற்காலம்" தான்!
சோழர் கல்வெட்டுகள் பலவும், கிரந்தத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
உடனே......"பாத்தீங்களா? கிரந்தம் = தமிழில் ஒன்னு;அப்பவே எல்லாரும் கிரந்த alphabet இல் தான் எழுதினாங்க!
பொதுமக்கள்,அம்மா வை = சம்மா" -ன்னு எழுதினாங்க ன்னு முடிவு கட்டீருவோமா?:)) (அ = சd in grantha; almost that shape)

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன!
அரசாங்கப் பண்டிதர்கள் கடைப்பிடித்த "வருஷ-சம்வத்ஸரங்களின்" பேரை, அவர்களே பொறித்து வைத்தார்கள்! அவ்வளவே!

* புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :))
இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடித் தான்!
பல பேருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது! = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு இவரு!

அவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் எழுதி வச்சிருக்காய்ங்க!
அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு! நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக....எனக்குப் பிடிச்சதே உண்மையாகி விடுமா என்ன? :)))


முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக எதுவும் இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த ஒன்றாகி விட்டதால்...பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனால் மழை துவங்கும் கார் காலம் (அ) பனி முடங்கலான தை மாதம் = முதன்மைக் காலமாகக் கொள்ளும் மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஒரு ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கவில்லை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:))

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கமும் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம் பின்பு எழுந்ததே!
அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே இல்லை-ன்னு ஆயீறாது...

* Tamil Season Measurements = பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months*6 = 12 months!
* Tamil Daily Measurements = சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs*6 = 24 hours!
*ஆண்டுப் பெயர் தான் இல்லை!

3. தமிழ் மரபில் & இலக்கியங்களில்.....மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை! = "தைஇத் திங்கள்"

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்....மேஷம் புகும் போதே துவங்கணும் - என்பதற்கு தமிழ் மரபிலே, ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தொல் தரவுகள் இல்லை!
-----------------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு வேணாம்பா; ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே....என்பவருக்கு....

சித்திரை ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன! ஒட்டிக் கொள்ளும்!
வரும் "வருஷம்" பேரு = நந்தன!:) நந்தன வாழ்த்துக்கள்:))
*  This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி

* இதே போல் Islamic Calendar உம் உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும், ஹிஜ்ரி கணக்குப் படி, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளா.....எங்க நாளை வைங்கோ -ன்னு சொல்லுறாங்களா என்ன?:)) இல்லையே!

* இதே போல் சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!
அவர்களும், தங்கள் நாளைத் தமிழில் புகுத்தவில்லை!
நாம மட்டும் ஏன் இப்படி......மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :))

இன்று நேற்றல்ல! பல காலங்களாக!
இல்லீன்னா.....சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு ஒன்னு பின்னாளில் எழுதி, அதைக் கோர்த்துக் கோர்த்து வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி இலக்கியம்-ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டுமே! அதை மொழி அமைப்பில் திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!
-----------------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது = Tamil Year Standardization மட்டுமே; புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறை (Continuous Numbering Scheme) க்கும் இது வித்திட்டது;

நிச்சயமாக.....இது புதிய முறை தான்!
= ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

Like BC & AD based on Christ, Saka Era based on Hindu King.....
Those are based on Religion; This is based on Language!
Anyways, this is only a "notation" for Tamizh; But Common Era (CE) applies for all of us!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லுங்க = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை; சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா....

* சித்திரை = வேண்டாம்! (என்னைப் பொறுத்த வரை)
* சித்திரை-ன்னாலே...மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும்/ போற்றப்படும் சிறப்பு மாதம்!
* தை-ன்னாலே....மதம் கலவாமல்....தமிழ் மட்டும் தனித்து தெரியும்!

Anyways, we ALL follow global notation for our daily lives = January 01!
But when it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point & NOT religions!
For that......Thai wud be the best!
Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!

ஆத்துல / வீட்டுல....பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு ன்னு ஒட்டுமொத்தம் ஆக்காதீக!
-----------------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு ன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சீங்கன்னா.....
Okay, நானே இறங்கி வரேன்; சித்திரை-க்கே ஒத்துக்கறேன்....ஆனா two small conditions!

a) தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; தமிழ்ப் புத்தாண்டு ன்னு சொல்லுங்கோ please:))
b) அந்த அசிங்கம் புடிச்ச 60 பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள் - தினத்தாள், நாட்காட்டி, அழைப்பிதழ்கள்.....எல்லாக் குறிப்பில் இருந்தும்!
= செய்வார்களா?? = "ஆசாரம்" இடங் குடுக்குமோ???

அதையும் நீக்க மாட்டேன்; ஆனா அது தான் தமிழ் "வருஷப்" பிறப்பு-ன்னா = this is called போங்கு!போங்கு-அடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "இந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!
(அ) just....விழாக்கால வாழ்த்துக்கள் :))

உசாத் துணை: (References)

1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்

5. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see this line - //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html
Viewing all 53 articles
Browse latest View live